Monday, January 31, 2011

நீல வானம் நீயும்... நானும்...

 கதைகளம் :

நாயகன் ஒரு ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி தற்போது ஒருவருக்காக வேவு பார்க்கும் வேலையை செய்ய ஒரு சொகுசு கப்பலில் பயணிக்கிறார். அதே கப்பலில் பயணிக்கும் நாயகி இவர் நம்மை வேவு பார்க்க வந்தவர் ‌என்று அறியாமல் அவருடன் பழகுகிறார். ஒரு கட்டத்தில் இவருக்கு திருமணம் ஆகிவிட்டாதா? இல்லையா? என்று கேள்வி எழும்போது நாயகன் எனக்கு திருமணம் ஆகிவிட்டது என்று சொல்லி, ஆனால் இப்போது அவள் உயிருடன் இல்லை என்று கூறுகிறார். அவர் எப்படி இறந்தார் என்று நாயகி கேட்ட அதை விளக்கியாக வேண்டும். அப்படி விளக்கும் போது இந்த பாடல் பயணிக்கிறது.

பொதுவாக தமிழ் படங்களில் பிளாஸ்பேக் கதைகள் வெகு நீளமாக பயணிக்கும். ஆனால் இந்த படத்தில் ஒரு பாடலில் அவரின் மொத்த கதையும் சொல்லப்பட்டு விடுகிறது...

நாயகன் ராணுவத்தில் இருக்கும் போது... தீவிரவாதியிடம் மாட்டிக் கொண்ட ஒரு குடும்பத்தை காப்பாற்றுகிறார். அதில் எஞ்சிய ஒரு பெண்ணை காப்பாற்றி பின் அது காதலாக மாறுகிறது.. பின் திருமணம்.. பின்பு மகிழ்ச்சியான வாழ்க்கை.. அவர் கர்பமாகிறார்..ஒரு நாள்  கொடைக்கானல் செல்லும் வழியில் ஒரு கார் விபத்தில் மனைவி இறந்து விடுகிறார்.  இதைதான் பாடலின் மூலம் விளக்கப்பட்டுள்ளது.

பாடலின் சிறப்பு

பொதுவாக தமிழ் சினிமா பல்வேறு புதுமைகளை புகுத்திக்கொண்டு வருகிறது. அதன் வரிசையில் இந்த பாடல் முழுவதும் தலைகீழாக பயணிக்கும்.. பொதுவாக கதை முதலில் ஆரம்பித்து இறுதியில் முடியும்.. ஆனால் இந்த பாடல் இறுதியில் தொடங்கி தொடக்கத்தில் முடியும்...
இந்த காட்சியில் நாயகன் (கமல்) இந்த பாடலுக்கு நேரடியாக பாடுவது போல் வாய் அசைப்பது மிகவும் அருமை... ஒரு பாடல் ஒரு கதை விளக்குகிறது..

பாடலின் விளக்கம் :

இந்த நீல வானம் போல் நாம் இணைந்தே இருப்போம். இந்த இயற்கையின் உதவியோடு நாம் வாழ்க்கை நடத்துவோம். பலநாடுகள் சேர்ந்து ஒரே நாடாக மாறுவது போல் நீ நானும் ஒன்றாக இணைவதைதான் இங்‌கே காதல் என்கிறார்கள்.. அதற்கு சாட்சியாக என்னை போல் பெண் குழந்தையும்.. என்று ஆண் பாடும் போது தன் மனைவின் பாதி என் உணர்கிறார்.. உணர்த்துகிறார்.

வந்தாரை வாழவக்கும் நம்இந்தியா காயத்தோடு வருபவரையும் காயம் ஆற்றும் ஆது போல நமக்குள் இருக்கும் காதல் நம் சோகங்களை ஆற்றும் இதுபோல் ஒண்றாக நாம் பல்லாண்டுகள் வாழ்வோம் என்று வர்ணனையுடன் இப்பாடல் சிறப்பாக எழுதப்பட்டுள்ளது.


பாடல் காட்சிகள் கோடைக்கானல் விபத்தில் ஆரம்பித்து... காஷ்மீர் தீவிரவாத சண்டையில் முடிவது போன்று படமாக்கபட்டிருக்கும்... 



பாடலின் விவரம்

படம் : மன்மதன் அம்பு
இசை : தேவி ஸ்ரீ பிரசாத்
பாடல் : கமலஹாசன்
பாடியவர் : கமலஹாசன்
இயக்கம் : கே.எஸ்.ரவிக்குமார்
படம் வெளியான தேதி : 23-12-2010
படத்தின் கால அளவு : 152 நிமிடங்கள்

பாடல் வரிகள் :

ஆண்     : நீலவானம் நீயும் நானும்
                  கண்களே பாஷையாய்
                  கைகளே ஆசையாய்
                  வையமே கோயிலாய்
                  வானமே வாயிலாய்
                  பால்வெளி பாயிலே
                  சாய்ந்து நாம் கூடுவோம்
                  இனி நீயென்று நானனென்று
                  இருவேறு ஆளில்லையே

{ஆண்      :   நீலவானம் நீயும் நானும்
பெண்      :   தி புளு ஸ்கை யூ அண்ட் ஐ} (ஓவர்லாப்)

சரணம் - 1

ஆண்      :    ஏதேதோ தேசங்களை
                   சேர்க்கின்ற நேசந்தனை
                   நீபாதி நான் பாதியாய்க்
                   கோர்க்கின்ற பாசந்தனை
                   காதல் என்று பேர் சூட்டியே
                   காலம் தந்த சொந்தமிது
                   என்னைப் போலே பெண்குழந்தை
                   உன்னைப் போலொரு ஆண் குழந்தை
                   நாம் வாழ்ந்த வாழ்வுக்கு சான்றாவது
                   இன்னொரு உயிர்தானடி

                    நீலவானம் நீயும் நானும்...

ஆ & பெ: பல்லாண்டு பல்லாண்டு
                   பல்லாயிரத்தாண்டு
                   பல கோடி நூறாயிரம்
                   பல்லாண்டு பல்லாண்டு
                   பல்லாயிரத்தாண்டு
                   பல கோடி நூறாயிரம்

குழு 
:  பல்லாண்டு பல்லாண்டு
              பல்லாயிரத்தாண்டு
              பல கோடி நூறாயிரம்


சரணம் - 2

ஆண்       :  ஆறாத காயங்களை
                  ஆற்றும் நம் நேசந்தனை
                  மாளாத சோகங்களை
                  மாய்த்திடும் மாயம்தனை
                  செய்யும் விந்தை காதலுக்கு
                  கை வந்த தொரு கலைதானடி
                  உன்னை என்னை ஒற்றி ஒற்றி
                  உயிர் செய்யும் மாயமும் அதுதானடி
                  நாம் வாழ்ந்த வாழ்வுக்கு சான்றாவது
                  இன்னொரு உயிர்தானடி

                  நீலவானம் நீயும் நானும் ...
 

அந்த பாடலையும் பாருங்க..






ஹலோ பாஸ்.. ஒரு ஓட்டுப்போட்டுட்டு.. அப்படியே ஒரு அட்னஸை போடுங்க பாஸ்...
நல்லதா ஒரு நாலு வார்த்தை சொன்ன எதுவுமே தப்பில்லை..

Saturday, January 29, 2011

பொன்மாலைப் பொழுது...


திரை இசை தமிழ் பாடல்களில் வளமான பாடல்கள் நம்மில் இருக்கிறது... அவற்றின் ஒளிந்துக்கிடக்கும் ஒருசில பாடல்களில் ஒன்றை இன்று தந்திருக்கிறோன் (என் அறிவுக்கு எட்டிய அளவுக்கு) இப்பாடலைப்பற்றி இன்னும் தகவல்கள் இருந்தால் பின்னுட்டத்தில் தெரியப்படுத்தவும்.

பாடலின் விவரம் :


பாடல் : பொன் மாலை பொழுது!!
படம் : நிழல்கள்  
வெளிவந்த நாள் : நவம்பர் 6, 1980
குரல் : S.P.பாலசுப்பிரமணியம்
இசை : இசை ஞானி இளையராஜா.
பாடலாசிரியர் : வைரமுத்து (இது வைரமுத்து திரைக்காக எழுதிய முதல் பாடல்)
படத்தின் இயக்கம் : பாரதிராஜா
பாடலில் நடித்தது : சந்திரசேகர்
 

பாடலுக்கான சூழ் நிலை :

ஓர் இளைஞன் கலா ரசிகன், வாழ்க்கையை மிகவும் நேசிப்பவன், சமூகத்தில் இருக்ககூடிய சிக்கல்களை தீர்க்க நினைப்பவன், ஆனால் அதற்கான தீர்க்கமான முடிவு தெரியாதவன் அப்படி இருக்கும் ஒரு இளைஞன் ஒரு மாலை நேரத்தில் மண்ணில் கொட்டிக் கிடக்கும் இயற்கை அழகை ரசித்து பாடும் படி இந்த பாடல் அமைந்துள்ளது.
பாடலுக்கானப் பொருள் :

மாலை நேரம் பகலின் தோலுரித்தி இரவு ஆடை அணிந்துக் கொள்ளும். அந்தநேரத்தில் இருக்கும் வண்ணமானது என்து வாசலில் கோலமிட்டு வானமானது இரவுசெல்ல பாலம் அமைத்து கொடுக்கும் போது பறவைகள் தாளமிட்டு இரவை வழியனுப்பும்.... இந்த வானம்தான் எனக்கு ஞானத்தை கொடுக்கும்.. கேள்விகளாளே எனது வேள்விகள் நடக்கும் என்று நாயகன் இயற்கையை பார்த்து பாடுகிறார். பாடல் காட்சியில் மாலைப் பொழுதை தன் கண்முன்னே கொண்டு காட்டியிருப்பார் பாரதிராஜா.

இதோ அந்த பாடல் வரிகள் :


பல்லவி

ஹே ஹோ ஹிம் லலா

பொன் மாலைப் பொழுது
இது ஒரு பொன்மாலைப் பொழுது
வானம் மகள் நானுகிறாள்
வேறு உடை பூணுகிறாள்
இது ஒரு பொன்மாலைப் பொழுது

சரணம் -1

ஆயிரம் நிறங்கள் ஜாலமிடும்
ராத்திரி வாசலில் கோலமிடும்
வானம் இரவுக்கு பாலமிடும்
பாடும் பறவைகள் தாளமிடும்
பூமரங்கள் சாமரங்கள் வீசாதோ... (இது..

சரணம் -2

வானம் எனக்கொரு போதிமரம்
நாளும் எனக்கது சேதி தரும்
ஒரு நாள் உலகம் நீதி பெறும்
திருநாள் நிகழும் சேதி வரும்
கேள்விகளால் வேள்விகளை நான் செய்தேன்... (இது...



விடுப்பட்ட  சரணம் -3

(வைரமுத்து அவர்களால் எழுதப்பட்டு பாடலில் இடம் பெறாத மூன்றாவது சரணம்)

”இரவும் பகலும் யோசிக்கிறேன்
எனையே தினமும் பூசிக்கிறேன்
சாலை மனிதரை வாசிக்கிறேன்
தீயின் சிவப்பை நேசிக்கிறேன்
பேதங்களே... வேதங்களா.. கூடாது..  (இது...

என்பது தான் அது.

இப்போது இந்த பாடலையும் கேட்டு ரசியுங்கள்...


Friday, January 28, 2011

வழிகாட்டுங்கள் பதிவர்களே..!


அன்பார்ந்த பதிவுலக நண்பர்களே மற்றும் வலைதல வாசகர்களே... லட்சக்கணக்கான வலை பதிவர்கள் சூழ்ந்துள்ள இந்த  பதிவுலகில் நானும் என்னுடைய பயணத்தை இன்றுமுதல் துவங்குகிறேன்...

வலைக்குள்.. பதிவர்ளே.. வாசகர்களே.. முதல் அடி எடுத்து வைக்கும் என்னையும் கரம் பிடித்து அழைத்துச்செல்லுங்கள்...

இருக்கும் வலைதளங்களை படிக்க ஆளில்லாத போது நீ வந்து என்ன கிழிக்கப்போகிறாய் என்ற கேள்வி உங்கள் நெஞ்சங்களில் எழும் என்ன செய்ய இந்த கடல்களுக்கு மத்தியில் நானும் ஒரு மடுவாய் இருந்து விட்டுப் போகிறேன்... இந்த மலைகளுக்கு மத்தியில் நானும் ஒரு கூழாங்கல்லாய் கிடந்து விட்டுப் போகிறேன்...


இந்த வலைதளத்தில் நான் ‌கேட்டு.. 
நான் ரசித்த தமிழ் திரைஇசைப்பாடல்களின் 
மேன்மையை.. 
அதன் அழுத்தத்தை... 
அதன் அர்த்தத்தை... 
அதன் காட்சி அமைப்பை... 
அதன் பொருளை உங்களோடு: பகிர்ந்துக் கொள்ள போகிறேன்

முடிந்தால் பாராட்டலாம்... இல்லையென்றால் தீட்டித்தீர்க்கலாம்...
ஏனென்றால் வாழ்வில் வசந்தத்தை காணாத உலக ஜீவன்களில் நானும் ஒருவன்... உங்கள் பாராட்டை நான் பக்குவமாக வாங்கிக் கொள்வேன்... உங்கள் வசைகளை உராமாக மாற்றிக் கொள்வேன்....


அதிகமான பதிவுகள் போட்டு அதிக பின்னுட்டங்கள் வாங்கி... அதிக ஓட்டுகள் வாங்கி... அதிக இட்டுகள் குவித்து நான் என்ன நாட்டையா ஆளப்போகிறோன்..
 

தமிழை.. தமிழ் மொழியின் சிறப்பை... தமிழ் மொழியின் வளத்தை உங்களோடு பகிர்வதே என்எண்ணம்...

இனி பதிவுகளால் தொடருவோம்

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...