Monday, February 28, 2011

இது கடவுள் தந்த அழகிய வீடு...


பாடலுக்கா சூழ்நிலை
மாமல்லபுரத்தில் டூரிஸ்ட் கைடாகக் காலம் தள்ளி வருபவர் 'அபேஸ்' பாலையாவான சூர்யா. பணம் இல்லாத போது அவ்வப்போது டூரிஸ்டுகளின் நகைகளை அபேஸ் செய்பவர்.   சூர்யாவுடன் அவரது நண்பராக சத்யன்  வருகிறார்.

டூரிஸ்ட் சீஸன் இல்லாத நேரத்தில் கொஞ்சம் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டு விடுகிறது. வீடு புகுந்து திருடுகிற முடிவை எடுக்கிறார்கள் சூர்யாவும் சத்யனும்.

நீலாங்கரையில் ஒரு பெரிய பங்களாவில் திருட நுழைகிறார்கள். அது திரைப்பட நடிகை ஜோதிகாவின் வீடாக இருக்கவே மனம் மாறி எடுத்த பொருட்களையெல்லாம் வைத்து விட்டுக் கிளம்பி விடுகிறார்கள். என்றாலும் வெளியேறும் நேரத்தில் போலீஸில் மாட்டிக் கொள்கிறார்கள். ஜோதிகாவின் மேனேஜர் அவரது விளம்பரத்துக்காக "வேறு மாதிரி" புகார் கொடுத்துவிட, சூர்யா மூன்று மாதம் ஜெயிலில் கழித்துவிட்டு வருகிறார். கடுப்பில் ஒரு ஷூட்டிங்கில் இருக்கும் ஜோதிகாவைக் கடத்தி விடுகிறார். 

அவ்வாறு கடத்திவிட்டு ஒதுக்கு புற பங்களாவில் தங்குகிறார்கள். அன்று ஜோதிகாவுக்கு பிறந்த நாள் வருகிறது  அதை கொண்டாடும் விதமாக ஒரு பிறந்த நாள் விழா ஏற்பாடு செய்து ஒரு ஊனமுற்ற பெண் அதை தொடர்ந்து சூர்யாவும் பாடும் படி பாடல் அமைந்துள்ளது.


பாடலுக்கான பொருள் : 



இந்த உலகம் ஒரு மிகப்பெரிய வீடு..  இந்த வீடு கடவுள் நமக்கு தந்த பரிசு...  இந்த உலகம் முழுவதும் நிறைந்து இருப்பது அவரே... எப்போதும் கண்களை மூடிக் கொண்டு அவரை துதிப்பாடுவோம்... நாமெல்லாம் கடவுளின் பிள்ளைகள்.. இங்கே கருணைப் பொங்கும் உள்ளங்கள் உண்டு.. ஒரு துயரறெண்று கலங்கிளால் கண்ணீரைத் துடைக்கும் கைகள் இங்கே நிறைய உண்டு. இந்த உலகத்தில் இருக்கும் எதுவும் நமக்கு சொந்தம் இல்லை. அதனால் அன்பு காட்டி அனைவரும் ஒன்று பட்டு வாழ்வோம்.

இந்த உலகில் எல்லா இடங்களிலும் இன்பங்கள் குடிக் கொண்டு இருக்கிறது. அவைகள் என்று‌மே குறைவதில்லை. நாம் வாழுகின்ற வாழ்க்கையில் என்று மே குறைகள் இல்லை.. எவ்வளவு நாள் நாம் வாழ வேண்டும் என்ற தீர்மானம் இருக்கிறதோ அதுவரை இந்த உலகில் வாழ்ந்து விட்டு போவோம்.. அப்படி மரணம் நம்மை அழைக்கும் போது அனைத்திடமும் நன்றி சொல்லி விட்டு சந்தோஷமாக விடைப் பெற்றுச் செல்வோம்.


இந்த உலகத்தில் இருக்கும் அனைவரும் சமம் தான்.. அவரவர் சுவாசிப்பதற்கு தனி காற்றோ.. குடிப்பதற்கு தனித்தனி தண்ணீர் என்று பிரித்து வைக்க வில்லை. இந்த இடத்தில் தான் மழையை பெய்விக்க  வேண்டும் என்று எந்த மேகமும் நினைப்பதில்லை...  நாமக்கு துன்பம் வரும் அதைக்க்ணடு கலங்காதீர்கள்.. அடுத்து வருவது இன்பம் நிறைந்த வசந்தக்காலம் தான்


வீழ்வதும் எழுவதும் தான் வாழ்க்கை இனி வசந்தத்தை நோக்கியே பயனிப்போம். அது தான் உண்மையான வாழ்க்கை என்று பொருள் படும் படி இந்த பாட்டு இயற்றப்பட்டு உள்ளது.


பாடலின் சிறப்புகள் :

1. படத்தில் சூர்யா ஜோதியா சேர்ந்து நடித்திருப்பார் (இந்த படத்தில் மட்டும் தான் ஜோதிக தன் சொந்த குரலில் பேசி நடித்தார்)

2. தமிழக செல் போன்களில் அதிக அளவில் ரிங் டோனாக இடம் பிடித்த பாடல்.

3. லைட் வெளிச்சம் இல்லாமர் அதிக பட்ச காட்சிகள் மெழுவர்த்திக் கொண்டே படமாக்கப்பட்டது.

4. உண்மையிலே ஊணமான ஒரு பெண்னை நடிக்க வைத்திருந்தார் இயக்குனர் சிங்கம் புலி.

பாடலின் விவரம் :

திரைப்படம் : மாயாவி
நடிகர்கள் : சூர்யா,  ஜோதிக, சத்யன்
பாடலாசிரியர் : பழனிபாரதி

பாடியவர்கள்:கல்பனா , SPB சரண்
இசையமைத்தவர்:தேவி ஸ்ரீப்ரசாத்
இயக்கம் : சிங்கம்புலி


அந்த முழு பாடல் MP3 வடிவில் 


TamilState - Kadavul Thantha Azagiya Vaazhu

Powered by mp3skull.com



அந்த பாடலின் வரிகள் :



பல்லவி :


கடவுள் தந்த அழகிய வாழ்வு ..
உலகம் முழுதும் அவனது வீடு .
கண்கள் மூடியே...
வாழ்த்து பாடு


கருணை பொங்கும்.. உள்ளங்கள் உண்டு
கண்ணிர் துடைக்கும் கைகளும் உண்டு

இன்னும் வாழனும் நூறு ஆண்டு
 

எதை நாம் இங்கு கொண்டு வந்தோம்
எதை நாம் அங்கு கொண்டு செல்வோம்

அழகே பூமியின் வாழ்க்கையை
அன்பில் வாழ்ந்து விடை பெறுவோம்...

ஓ ஓ ஓஓஒ.....



சரணம் : 1


பூமியில் பூமியில்
இன்பங்கள் என்றும் குறையாது
வாழ்க்கையில் வாழ்க்கையில்
எனக்கென்றும் குறைகள் கிடையாது
 

எதுவரை வாழ்க்கை அழைக்கிறதோ.. ஒ..
எதுவரை வாழ்க்கை அழைக்கிறதோ
அது வரை நாமும் சென்றுவிடுவோம்
 

விடைபெறும் நேரம்
வரும் போதும் சிரிப்பினில்
நன்றி சொல்லிவிடுவோம்
 

ஓஓஒ ஓஒ
 

பரவசம் இந்த பரவசம்
என் நாளும் நெஞ்சில் தீராமல் இங்கே வாழுமே

சரணம் - 2

நாம் எல்லாம் சுவாசிக்க தனி தனி காற்று கிடையாது
மேகங்கள் மேகங்கள்
இடங்களை பார்த்து பொழியாது
 

கோடையில் இன்று இலையுதிரும்
வசந்தங்கள் நாளை திரும்பி வரும்
வசந்தங்கள் மீண்டும் வந்துவிட்டால்
குயில்களின் பாட்டு காற்றில் வரும்
 

முடிவதும் பின்பு தொடர்வதும்
இந்த வாழ்க்கை சொல்லும்
பாடங்கள் தானே
கேளடி
( கடவுள் தந்த அழகிய வாழ்வு )



‌ அந்த பாடலையும் பார்த்துட்டு போங்க..



என் வேலையை நான் செய்து விட்டேன் ரசித்தவர்கள் தயவு செய்து  கருத்து சொல்லிவிட்டு செல்லுங்கள்..
 
இப்பாடல் நண்பர் நாஞ்சில் மனோ அவர்களுக்கு  சமர்ப்பிக்கிறேன்..

அன்பான வாசகர்களே இதை எப்போது படித்தாலும்  தங்களுடைய கருத்தை சொல்லுங்க.. அதுதான் என்னைமேலும் உழைக்க வலுசேர்க்கும்... நன்றி... நன்றி...

Friday, February 25, 2011

தன்னபிக்கையின் ஊற்று ஒவ்வொரு பூக்களுமே...


பாடலுக்கான சூழ்நிலை

 படத்தின் நாயகியை அறிமுகப்படுத்துகிற  காட்சி.. இந்த கதாபாத்திரத்தின் மனநிலையானது அனைவரிடமும்  நம்பிக்கை ஊட்டும் படியான வார்த்தை பேசுகிற, மற்ற அனைவருக்கும் தூண்டு கோளாய் இருக்கிற ஒரு கதாபாத்திரம். நாயகன் நல்ல குணமுடைய தன்மனதுக்கு பிடித்த ஒரு பெண்ணை தேடுகிற இளைஞன். இந்த இருவரையும் சந்திக்க வைக்க வேண்டும். ஊனமுற்றவர்கள் நடத்தும் ஒரு இசை நிகழ்ச்சியில் நாயகி பாட விருப்பப்பட்டு கல்ந்துக் கொண்டு பாடும் படி இப்பாடல் படத்தில் அமைகிறது.. இந்த இசை நிகழ்ச்சிக்கு  நாயகனும் வருகிறார். படத்தில் நாயகனும் நாயகியும் விரும்புவதற்கு இப்பாடல் அடித்தளமாக இருக்கிறது..

பாடலுக்கான விளக்கம் :
 

இந்த உலகில் எத்தனையோ கோடி மக்கள் வந்தார்கள் சென்றார்கள். அந்த கோடி பேர்களில் எத்தனைப் பேர் தன்னை சார்ந்து மக்களின் வளர்ச்சிக்கு, அவர்களின் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருந்தார்கள். இங்கே வழிகாட்டுபவர்களை விட வழியாவர்களைத்தான் உலகம் தனிமைப்படுத்திக் காட்டுகிறது. ஒவ்வொருவருக்கும் தன்னம்பிக்கை அவசியம், அந்த தன்னபிக்கை வர‌வழைக்க இங்கே தன்னம்பிக்கையாளர்கள் அவசியம் வேண்டும். அப்போது தான் சுற்றிக்கிடற சூழ்நிலைகளை தூரம் தள்ளி இந்த உலகை ஆளூம் வல்லமை கிடைக்கும்.

பூக்கள் மென்மையானது அந்த பூக்கூட சொல்கிறது இந்த உலகம் ‌போர்களமாக இருக்கிறது. அதில் போராடிதான் வெற்றியை கான வேண்டும்.


நாம் மனதளவில் திடமான இருக்கவேண்டும். எந்த ஒரு பிரச்சனையும் எதிர்கொள்கிற மனதிடத்தை கடவுள் நமக்கு தந்திருக்கிறான் அதை நாம் சரியாக பயன்படுத்த வேண்டும். வலியில்லாமல் கிடைப்பதற்கு வாழ்க்கையும், வெற்றியும் ஒன்றும் புள்ளும் பூண்டும் அல்ல. ஆயிரம் முத்தங்களை உள்வாங்கினால்தான் ஒரு பாறை சிலையாகிறது. ஒரு பட்டாம் பூச்சி காலத்தை தின்று தான் பு‌ழுவிலிருந்து வெளிப்படுகிறது. போராட்டங்களை எதிர்கொண்டு ‌வெற்றிக்கான ஆசைப்பட்டால் அது கண்டிப்பாக கிடைக்கும்



உச்சிகளை குறிவையுங்கள்... இந்த வானம் அளவுக்கு யோசியுங்கள்... எடுத்து ‌வைக்கும் ஒவ்வொறு அடியும் நம்பிக்கையோடு எடுத்து வையுங்கள்...  வைரமுத்து சொல்வான் தலையில்லாமல் கூட நடந்து விடு ஆனால் தன்னம்பிக்கை இல்லாமல் ஒரு அடிக்கூட எடுத்து வைக்காதே.. நாம் எடுத்து வைக்கும் ஒவ்வோறு அடியும் நம்பிக்கையோடு எடுத்து வைத்தால் இந்த வாழ்க்கை நம் வசந்தமாக்கும்...



பாடலின் சிறப்புகள்
 

1.இந்த பாடலுக்கு இந்த பாடலை பாடிய சித்ரா அவர்களுக்கு தேசிய விருது கிடைத்தது. 

2.தேசிய விருது பெற்ற இந்த பாடலை  திருச்சிராப்பள்ளியில் ஒரு பள்ளியில் காலை நேர பிரார்த்தனைக்காக சிறுவர்கள் பாடுவதாகவும், ஒரு பல்கலைக் கழகத்தில் பாடத் திட்டத்தில் இதுவும் இணைக்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. 
3.இந்த பாடல் காட்சியில் சினேகா மிகவும் உருக்கமாக பாடி நடித்திருப்பார்.
4.ஊனமுற்ற நண்பர்களை கொண்டு படமாக்கியிருப்பார் சேரன்
5.தமிழில் இப்படம் நான்றாக ஓடியதற்கு இப்பாடலும் ஒரு காரணம்.

6. உருக்கமாக இப்பாடலைப் பார்த்தால் கண்களில் கண்ணீர் வருவது உறுதி
 
பாடல் விவரம் :


திரைப்படம் : ஆட்டோகிராப்
பாடல் : பா.விஜய்
பாடியவர் : ‌கே.எஸ்.சித்ரா
பாடலுக்கு இசை : பரத்வாஜ்
படம் வெளிவந்த ஆண்டு : பிப்ரவரி 2004
கதை, இயக்கம், தயாரிப்பு : சேரன்


அந்த பாடல் வரிகள் : 

பல்லவி :

ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்களமே

ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே
இரவானால் பகல் ஒன்று வந்திடுமே

நம்பிக்கை என்பது வேண்டும் நம் வாழ்வில்
லட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில்

மனமே ஓ மனமே... நீ மாறிவிடு
மலையோ அது பனியோ... நீ மோதிவிடு

சரணம்- 1

ஆஹ..     ஆஹ..    ஆஹ..

உள்ளம் என்றும் எப்போதும் உடைந்து போக கூடாது
என்ன இந்த வாழ்க்கை என்ற எண்ணம் தோன்ற கூடாது

எந்த மனித நெஞ்சுக்குள் 
காயம் இல்லை சொல்லுங்கள்
காலபோக்கில் காயமெல்லாம்
மறந்து போகும் மாயங்கள்

உளி தாங்கும் கற்கள் தானே மண்மீது சிலையாகும்
வலி தாங்கும் உள்ளம் தானே நிலையான சுகம் காணும்

யாருகில்லை போராட்டம் 
கண்ணில் என்ன நீரோட்டம்
ஒரு கனவு கண்டால் அதை தினம் முயன்றால்
ஒரு நாளில் நிஜமாகும்

மனமே ஓ மனமே... நீ மாறிவிடு
மலையோ அது பனியோ.... நீ மோதிவிடு

சரணம் - 2

வாழ்க்கை கவிதை வாசிப்போம்
வானம் அளவு யோசிப்போம்
முயற்சி என்ற ஒன்றை மட்டும்
மூச்சு போல சுவாசிப்போம்

லட்சம் கனவு கண்ணோடு
லட்சியங்கள் நெஞ்சோடு
உன்னை வெல்ல யாருமில்லை உறுதியோடு போராடு

மனிதா உன் மனதை கீறி விதை போடு மரமாகும்
அவமானம் படுதோல்வி எல்லாமே உறவாகும்

தோல்வி இன்றி வரலாறா
துக்கம் என்ன என் தோழா

ஒரு முடிவிருந்தால்...அதில் தெளிவிருந்தால்
அந்த வானம் வசமாகும்

மனமே ஓ மனமே... நீ மாறிவிடு
மலையோ அது பனியோ.... நீ மோதிவிடு



அந்த பாடலையும் பார்த்துவிட்டு போங்க..


இந்த பாடல் நண்பர் ரஹீம் கஸாலி அவர்களுக்கு பிடித்த பாடல் அதனால் இதனை அவர்க்கு சமர்ப்பிக்கிறேன்..
என்ன ஆச்சா அப்புறம் உங்க வேலை.. மாமூலை கொடுத்துட்டு போங்க..
நான் உங்க பாட்டு ரசிகனுங்க...

Monday, February 21, 2011

கண்கலங்க வைக்கும் பெத்து எடுத்தவதான்.....



பாடலுக்கான  சூழ்நிலை :

கிராமத்திலிருந்து சென்னைக்கு வரும் ரகுபதி (ரஜினி) ஒரு ஓட்டலில் வேலைக்கு சேருகிறார்.  அந்த ஓட்டலில்  நல்ல பெயர் வாங்கி அந்த ஓட்டல் முதலாளின்  நல்ல வேலைக்காரன் என்ற பெயருடன் அவர் வீடுவரை சென்று பணியாற்றுகிறார். அவருடைய முதலாளியாக சரத்பாபு நடித்திருப்பார். ரகுபதி எவ்வாறு வேலை செய்கிறார் என்பதை பார்க்க  சென்னை வரும் வளையாபதி (வி.கே.ராமசாமி) ஓட்டலில் தங்கி ரகுபதியை கண்காணிக்கிறார்.

இதற்கிடையில் தான் தங்கி வேலை செய்யும் முதலாளியின் தாயார் தான் தன்னுடைய தாயார் என்று ரகுபதிக்கு தெரிய வருகிறது. (தாயாராக கே.ஆர். விஜயா நடித்திருப்பார்) ஆனால் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருப்பார். சரத்பாபு வளர்ப்பு தாய் என்று தெரிந்து, தன்னை கொல்ல இவர் சதி செய்கிறார் என்று சரத்பாபு குற்றம் சாட்ட, குற்றவாளியாக நிற்கும் தன் தாய்க்கு உதவமுடிய வில்லையே என் உருக்கமாக பாடும் படி பாடல் அமைந்துள்ளது..


பாடல் விளக்கம் :

தன்னை பெத்த நம் தாய் தன்னை தத்து கொடுத்து விட்டு வந்து விட்டாளே. தான் கடன் பட்டதற்காகவா என்னை விற்று வட்டி செலுத்திவிட்டால்..   என்னுடைய மனதை இப்படி பித்தாகு படி செய்து விட்டாரே உறுக்குமாக  பாடுகிறார்..

நான் தான் அவர் வயிற்றில் பிறந்தவன் ஆனால் என்னிடம் அன்பு காட்டவில்லை, ஆனால் வளர்ப்பு பிள்ளை அவருடைய அன்பையே கொச்சைப்டுத்துகிறானே.. நாமெல்லாம் குழைந்தையாகவே இருந்து விட்டால் இவ்வளவு பிரச்சனைகள் இல்லை வளர்ந்தால் இப்படிதான்.. சாதாரண ஒரு சட்டை கிழிந்து விட்டால் தைத்து உடுத்திக் கொள்ளலாம் ஆனால் நெஞ்சு கிழிந்து விட்டால் என்ன செய்வது

கிளியை வளர்த்தால் அதனால் எந்த பிரச்சனையும் இருக்காது. ஆனால் புலியை வளர்த்தால் அதனால் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க வேண்டும் தனக்கு உண்மை தெரிந்தும் அதை சொல்ல முடிய வில்லையே... இதற்கெல்லாம் ஒரே தீர்வு தன் தாய் வாய் திறந்து உண்மைகளை சொல்ல வேண்டும். அப்போதுதான் பிரிந்த இந்த கிளிகள் ஒன்று  சேரும் என்று பொருள் படும் படி இப்பாடல் இருக்கும்.

பாடல் சிறப்புகள் :

1. இப்பாடல் மலேசிய வாசுதேவன் மிகவும் உறுக்கமாக பாடியிருப்பார். தாய் சென்டிமென்டில் பார்ப்பவர்களை கண்கல்கவைக்கும் பாடல்.

2. கவிஞர் மு. மேத்தா அவர்கள் எழுதிய பாடல்

3. இரவு பிண்ணனியில் இப்பாடல் அமைந்திருக்கும்

4. இயைராஜாவின் இந்த இசை எக்காலத்திலும் அழியாமல் இருக்கும்.

5. ரஜினி அவர்கள் மிகவும் கதாபாத்திரத்தை உள்வாங்கி அந்த கவலையை முகத்தில் குடியேற்றி பாடியிருப்பார்.

பாடலின் விவரம் :


திரைப்படம் : வேலைக்காரன்
பாடலாசிரியர் : மு.மேத்தா
நடிகர்கள் : ரஜினிகாந்த, சரத்பாபு, அமலா, கே.ஆர் விஜயா, ராமசாமி
இசை : இளையராஜா
வருடம் : 1987
இயக்குனர் : S.P. முத்துராமன்

 

அந்த பாடல் வரிகள் :


பல்லவி : 


பெத்து எடுத்தவதான் என்னையும் தத்து கொடுத்து கொடுத்துப்புட்டா 
பெத்த கடனுக்குத்தான் என்னை வித்து வட்டியை கட்டிப்புட்டா
 

பிள்ளையின் மனசு பித்தாச்சு இங்கு பெத்தவ மனசு கல்லாச்சு
இன்னொரு மனசு என்னாச்சு -அது முறிஞ்சுபோன வில்லாச்சு (பெத்து)
 

சரணம் : 1  
 

வயிற்றுல வளத்த புள்ள வந்து நிக்க வாசலில்லே
மடியிலே வளந்ததுக்கு இங்கிருந்த ஆசையில்லே
 


மகனா பொறந்ததுக்கு தொட்டணைக்க தாயுமில்லை
மகனா வளர்த்த புள்ள துள்ளுறது நியாயமில்லை
 

தொட்டிலில் நாம் கிடந்தா சோகம் வந்து சேர்வதில்லை
தோளில் வாழும் வரை துன்பமுன்னு ஒண்ணுமில்லை
 

கட்டில் பார்த்த பின்னே காண்பதெல்லாம் எங்கு சொல்ல
கண்ணுல ஆறிருக்கு போவதுக்கு தோணி இல்லை
 

சட்டை கிழிஞ்சிருந்தா தைச்சி உடுத்திரலாம்
நெஞ்சு கிழிஞ்சிருக்கே எங்கே முறையிடலாம்
 

காவிரி கங்கை ஆறுகள் போல கண்களும் இங்கே நீராட
 

சரணம் : 2

தலையில் வகிடுடேடுத்த தங்க விரல் பார்த்தேனே
தலையில் எழுதிவைத்த அந்த விரல் - பார்த்தேனா
 

கிளியை வளர்த்தெடுத்தா கேள்வியது கேட்காது
புலியை வளர்த்தெடுத்தா பாசமுன்னு பார்க்காது
 

சொல்லத்தான் வார்த்தையின்றி தாய்மனசு நோகுமிங்கு
சொல்லவே வாயுமின்றி ஓர் மனசு வாடுமிங்கே
 

சொல்லிலே வேலெடுத்து வீசுகின்ற சேயுமங்கே
மௌனத்தை பேசவிட்டா மாறிவிடும் யாவும் இங்கே
 

ரெண்டு கிளியிருக்கு ஒண்ணு தனிச்சிருக்கு
பெத்த கிளி அதுக்கு எந்த துணையிருக்கு
ஊர்ல எங்கே நாட்டுல எங்கே - காட்டுங்க எங்க தாய்ப்போல


அந்த பாடலையும் பாருங்க :






மலேசிய வாசுதேவன் அவர்கள் மறைவிற்கு இப்பதிவு சமர்ப்பனம்
 இதை எப்போது படித்தாலும் ஏதாவது ஒரு கருத்து சொல்லிட்டு போங்க..

Monday, February 14, 2011

காதலின் மனம்வீ சும் கண்ணே கலைமானே...


பாட்டுக்கான சூழ்நிலை...

விபத்தின் காரணமாக மன நோயாளியாக்கப்படும் விஜி (ஸ்ரீதேவி) மருத்துவபரிசோதகைக்கு செல்லும் வழியில் தவறிவிடுகிறார். பின்னர்  தவறுதலாக விலைமாதுவாக விற்கப்படுகின்றார். அவரை அங்கு சந்தித்துக் கொள்ளும் நல்ல மனம் கொண்ட நாயகன் சுப்பிரமணி (கமலஹாசன்) எனும் ஆசிரியரால் காப்பாற்றப்பட்டு பின் அவரின் வீட்டிற்கு அழைத்து செல்கின்றார் விஜியின் நிலையைக்கண்டு பரிதவிக்கும் சுப்பிரமணி ஒரு கட்டத்தில் அவரை அறியாமலையே விஜிமீது காதல் கொள்ளுகிறார். அவ்வாறு அவ்வாறு காதல் கொண்டு அவரை மிகவும் பாதுகாப்பாக பாதுகாக்கிறார் அந்த சூழலில் இந்த பாடல் இடம் பெறுகிறது..

பாடலின் பொருள் : 

அன்பே உன்னை எண் கண்ணே உன்ன கன்னி மயில் என்று உன்னை நினைக்கிறேன்... ஒரு கனமும் தவறாமல் உன்னைப்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.. அன்பே ஊமையாக இருந்திருந்தால் நான் அமைதியாக இருந்து விட்டு இருப்பேன்.. இல்லை ஏழையாக இருந்து விட்டால் அது ஒரு தனிப்பட்ட அமைதி...  நீ கொஞ்சும் கிளிப்போன்றும்.. பாடும் குயில் போன்று இருக்க வேண்டியவள் உன் வாழ்வில் கடவுள் இப்படி சதி செய்து விட்டாரே.... உன் மீது நான் காதல் கொண்டு பல்வேறு கனவினை வளர்த்துள்ளளேன்.. உனக்காக உன் உயிராக மாறி விட்டடேன் அன்பே என்னை எந்நாளும் மறந்து விடாதே... உன்மையில் நீ இல்லாமல் எனக்கு நிம்மதியில்லை என்று உருக வைக்கும் பாடல் வரிகள்.

பாடலின் சிறப்புகள் :

1.   கவிஞர் கண்ணதாசன் தன் மூச்சை இறக்கி வைத்தப்பாடல்...
     திரைஉலக கவியரசர் சினிமாவில் எழுதிய கடைசிப்பாடல்.

2.  ஸ்ரீதேவியின் குறும்பு தன நடிப்பும், கமலின் காதலில் விழுந்த ஒரு இளைஞனின் மனநிலையும்,  நடிப்பும் மிக அருமையாக இருக்கும். இப்படத்தில் கடைசிக் காட்சிக்காக கமலுக்கு தேசிய விருது கிடைத்தது.

3. இளையராவின் இசையில் அமைந்த இந்த பாடல் என்றும் இளமையோடு காணப்படுகிறது.

4. இரண்டு சில்வர் லோட்ஸ் விருது இப்படத்திற்கு கிடைத்தது.

5. இப்பாடலில் ஊட்டியின் இயற்கை அழமை மிகவும் அழகாக காட்டியிருப்பார், இயக்குனர் பாலு மகேந்திரா.


பாடலின் விவரம் :



படம் : மூன்றாம் பிறை
பாடியவர் :  கே. ஜே. ஜேசுதாஸ்
பாடல்  : கண்ணதாசன்
இசை :  இளையராஜா
வெளிவந்த ஆண்டு : 1983
இயக்கம் : பாலு ம‌கேந்திரா

 

அந்தப்பாடல் : 


பல்லவி

கண்ணே கலைமானே..
கன்னி மயிலென
கண்டேன் உனை நானே..
அந்திப் பகல் உனை நான் பார்க்கிறேன்
ஆண்டவனை இதைத் தான் கேட்கிறேன்
ஆரிராரோ... ஓராரிராரோ...
 

சரணம் - 1

ஊமை என்றால் ஒரு வகை அமைதி
ஏழை என்றால் அதில் ஒரு அமைதி
நீயோ கிளிப்பேடு..
பண்பாடும் ஆனந்த குயில் பேடு
ஏனோ தெய்வம் சதி செய்தது
பேதை போல விதி செய்தது

சரணம் - 2


காதல் கொண்டேன் கனவினை வளர்த்தேன்
கண்மணி உனை நான் கருத்தினில் நிறைத்தேன்
உனக்கே உயிரானேன்..
எந்நாளும் எனை நீ மறவாதே
நீயில்லாமல் எது நிம்மதி...
நீதானே என் சந்நிதி...



அந்தப்பாடலையும் கேளுங்கள் :



இந்தப்பாட்டு ரசிகனை ஆதரியுங்கள்... 
உங்களின் கருத்துக்காக காத்திருக்கிறேன்

Thursday, February 10, 2011

போவோமா ஊர்கோலம் .... பூலோகம் எங்கெங்கும்...


பாடலின் சூழ் நிலை :


நாயகன் (பிரபு) ஒரு விவரம் தெரியாத அப்பாவி.. படத்தில் வி‌ஷேசங்களில் பாடல் பாடி பொழப்பு நடத்துவர் வெகுளி. நாயகி (குஷ்பு) மூன்று அண்ணன்களுக்கு தங்கையாக பிறந்து பொத்தி பொத்தி வளர்க்கிறார்கள். ஊரில் இவரை எந்த ஆம்பளையும் பார்க்க கூடாது.. பேசக்கூடாது என்று உத்திரவே போட்டு வய்த்துள்ளார்கள். இதனால் வெளியில் செல்லாமல் வீட்டிலேயே அடைபட்டுக்கிடக்கிறார். நாயகன் மட்டும் அந்த வீட்டில் போக வர உரிமையுள்ளது.. (அவர் வெகுளி என்பதால்) வீட்டில் அடைந்து கிடக்கும் நாயகி ஊரைச்சுற்றிப்பார்க்க ஆசைப்பட்டு அண்ணன்களுக்கு தெரியாமல் நாயகனுடன் ஊரைச்சுற்றிப்பார்க்க வெளியே செல்கிறார்.. அப்போது புதியதாக வெளியில் வந்து நாயகி பார்த்து அதிசயிக்கும் அத்தனையும் வியந்து பார்த்து பாடும் படி பாடல் அமைந்துள்ளது...

பாடல் பொருள் :
 

இக்கரைக்கு அக்கரை பச்சை என்பார்கள் அதனால் அரண்மனைக்குள்ளே இருந்தவருக்கு வெளி சூழல் வயல்வெளி, வரப்பு, வாய்க்கால், அறுவி,  தென்றல் காற்று, சிட்டுக்குருவியின் சினுங்கள், குயிலின் பாட்டு, என அத்தனையும் ஆனந்தப்படுத்துவதாய் இருக்கிறது.. அதனால்தான் இந்த பூலோகம் எங்கும் ஊர்கோலம் போவோமா என்று கேட்கிறார். ஓடுகின்ற இந்த பொன்னி நதிக்கூட ஆயிரம் சுரங்கள் சொல்கிறதே என்று அதிசயிக்கிறார். நதியின் ஓசை.. குருவியின் சப்தம், வயற்காடு இதையெல்லாம் ஆனந்தம் என்று சொல்லும் நாயகியின் கருத்து நாயகனை முகம் சுளிக்க வைக்கிறது.. இதிலென்ன சுகம் அரண்மனைதான் உண்மையான சுகம் என்று மறுப்பு தெரிவிக்கிறார் ஏன் என்றால் அவர் அரண்மனை சூழலைத்தான் சுகம் என்று நினைக்கிறார். எப்போதும் இயற்கையோடு ஓன்றி வாழ்வதால் அதை தனிமைப்படுத்தி பார்க்க முடியாதவராய் இருக்கிறார்.

பாடலின் சிறப்பு : 


இந்த பாடலை திரு. கங்கைஅமரன் எழுத அதை ராகதேவன் தன்னுடைய இனிமையான இசையில் மிகவும் அழகாக கொடுத்திருப்பார். பாடலை இயற்கை எழில் கொஞ்சும் கிராமப் ‌பிண்ணனியில் அழகாக படமாக்கியிருப்பார் வாசு. இதில் குஷ்புவின் முக பாவனையும், பிரபுவின் அந்த குறுஞ்சிரிப்பும் மிகவும் அ‌ழகாக இருக்கும்.


பாடலின் விவரம் :


திரைப்படம் :  சின்னத்தம்பி
நடிகர்கள் : பிரபு, குஷ்பு, ராதாரவி,
பாடியவர்கள் :
எஸ்.பி.பாலசுப்ரமணியம்  சுவர்ணலதா 
பாடலாசிரியர் : கங்கை அமரன்
இசை : இளையராஜா
இயக்கம் : பி.வாசு
படம் வெளியான ஆண்டு : 1991
 

அந்த பாடலின் வரிகள் :


பல்லவி

பெ : போவோமா ஊர்கோலம் ....
           பூலோகம் எங்கெங்கும்... 
           ஓடும் பொண்ணி ஆறும்...பாடும் கானம் நூறும்
           காலம் யாவும் பேரின்பம்...கானும் நேரம் ஆனந்தம்
           போவோமா ஊர்கோலம் ....
           பூலோகம் எங்கெங்கும்... 
 

சரணம் - 1

ஆ : அரண்மனை அன்னக்கிளி தரையில நடப்பது 

           நடக்குமா அடுக்குமா
 

பெ : பணியிலும் வெட்டவெளி வெய்யிலிலும் உள்ளசுகம் 
           அரண்மண கொடுக்குமா
 

ஆ :  குளுகுளு அரையில கொஞ்சிக் கொஞ்சி தவழ்ந்தது
           குடிசைய விரும்புமா
 

பெ : சிலுசிலுசிலுவென இங்கிருக்கும் காத்து அங்க 
           அடிக்குமா கிடைக்குமா
 

ஆ :  பளிங்கு போல உன்வீடு வழியில பள்ளம் மேடு
பெ : வரப்பு மேடும் வயலோடும் பறந்து போவேன் பாரு
 

ஆ :  அதிசயமான பெண்தானே
பெ : புதுசுகம் தேடி வந்தேனே 
 

போவோமா ஊர்கோலம் ....
பூலோகம் எங்கெங்கும்... 
ஓடும் பொண்ணி ஆறும்...பாடும் கானம் நூறும்
காலம் யாவும் பேரின்பம்...கானும் நேரம் ஆனந்தம்
போவோமா ஊர்கோலம் ....
பூலோகம் எங்கெங்கும்...  

சரணம் - 2
 

பெ : கொட்டுகிற அருவியும் மெட்டுக்கட்டும் குருவியும் 
          அடடடா அதிசயம்
 

ஆ : கற்பனையில் மிதக்குது கண்டதையும் ரசிக்குது 
          இதிலென்ன ஒரு சுகம் 
 

பெ : ரத்தினங்கள் தெறிக்குது முத்துமணி ஜொலிக்குது
           நடந்திடும் நதியிலே
 

ஆ :  உச்சந்தல சொழலுது உள்ளுக்குள்ள மயங்குது 
          எனக்கொண்ணும் புரியல்லே
 

பெ : கவிதை பாடும் காவேரி ஜதிய சேர்த்து ஆடும்
         அணைகள் நூறு போட்டாலும் அடங்கிடாம ஓடும்
 

ஆ :  போதும் போதும் உம் பாட்டு
பெ : பொறப்படப் போறேன் நிப்பாட்டு 
 

போவோமா ஊர்கோலம் ....
பூலோகம் எங்கெங்கும்... 
ஓடும் பொண்ணி ஆறும்...பாடும் கானம் நூறும்
காலம் யாவும் பேரின்பம்...கானும் நேரம் ஆனந்தம்
போவோமா ஊர்கோலம் ....
பூலோகம் எங்கெங்கும்... 


அந்தப்பாடலையும் பாருங்களேன் :


அன்பான வாசகர்களே இதை எப்போது படித்தாலும்  தங்களுடைய கருத்தை சொல்லி விட்டுபோங்கள்.. அதுதான் என்னை உற்சாகப்படுத்தும்...

Monday, February 7, 2011

பேருந்தில் நீ எனக்கு ஜன்னலோரம்...


பாடலுக்கான சூழ்நிலை :
 
எதற்கும் கவலைப்படாத ஒரு யாதர்த்தமான வாலிபராக. நாயகன்.. தவறுநடக்கும் போது... ‌அது யாராக இருந்தாலும் தட்டிக் கேட்பவர் . ஒரு முரட்டு குணம், தந்தையுடன் வசிக்கிறார்.. நாயகியும் ஏறக்குறைய ‌அதே போன்று தான்... இவர்கள் இருவருக்கும் சந்திக்கும் போதெல்லாம் சண்டையில் ஆரம்பிக்கிறது.. பின்பு கொஞ்சம் கொஞ்சமாக அது அவர்களுக்கு தெரியாமல் காதலாக மாறுகிறது அப்படி காதலாக மாறும் போது ஏற்படுகிற  சந்தோஷ உணர்வை சொல்வது போல் இந்த பாடல் அமைந்துள்ளது...
 
பாடலுக்கான விளக்கம் :
 
பொதுவாக மனிதனுக்கு ஏற்படுகின்ற மகிழ்ச்சியான சம்பவங்கள் மிகக்குறைவு.. ஆனால் வாழ்க்கையில் நம்மை அறியாமலையே பல்வேறு மகிழ்ச்சியான சம்பவங்கள் தம்மை சுற்றியே இருக்கிறது.. அவற்றை நாம் அப்போது நம்மை அறியா‌தலேயே உணர்கிறோம்...
 
உண்டு முடித்தப்பின் தெரியும் நெல்லிக்கனியின் சுவையைப்போல்.. சில விஷயங்கள் முடிந்த பிறகே அவற்றின் மதிப்பை  நாம் உணர்வோம்..  அந்த யாதர்த்த தருணங்களை வரிசைப்படுத்தியே இந்த பாடல் இயற்றப்பட்டுள்ளது..

பேருந்தில் ஏறியவுடன் நாம் ஜன்னலோர‌த்தில் தான் சீட் பிடிப்போம்... ஜன்னுலோரத்தில் அமர்ந்து அனைத்தையும் வேடிக்கைப்பார்ப்பது  தன்னுடை பயணத்ததை இனிமையாக்கும்... அது போல பள்ளி பருவத்தில் விடுமுறையின் போதுதான்  இது போன்று பல்வேறு தருணங்களில் நாம் அனுபவிக்கும் சந்தோஷத்தருணங்னளை நாயகனும் நாயகியும் மாறி.. மாறி... செல்லிக் கொள்வது போல் இந்த பாடல் இருக்கிறது..

இறுதியில் காதலிக்கு காதலனும்.. காதலனுக்கு காதலியும் எழுதும் கடிதத்தில் இருக்கும் எழுத்துப்பிழையைக்கூட ரசிக்கிற பக்குவம் இந்த காதலுக்குதான் வரும் என்று காதலுக்கு மிக அழகான விளக்கத்தை தருகிறது.

அனைத்து சந்தோஷகளையும் காதலில்  பெறலாம் என்ற இந்த பாடல் காலம் முழுக்க நிலைத்து நிற்கும்...
 
பாடல் காட்சிகள் :
 
பாடல் காட்சிகள் மலைப்பிரதேச புள்வெளி படுகை, அருவி.. என அழகு கொஞ்சும் சூழலழல் மலையாள பாரம்பரிய கலரி சண்டை வீரர்கள் பின்னணியில் ஆடி பாடலை அழகுபட இயக்கியிருக்கிறார் சிவா.
 
பாடல் விவரம் :

படம் : பொறி (2007)
நடிப்பு : ஜீவா, பூஜா,
இசை : தீனா

பாடலாசிரியர்: யுகபாரதி
பாடியவர்கள் : மது பாலகிருஷ்ணன், மதுஸ்ரீ
ஒளிப்பதிவு : ஏகாம்பரம்
இயக்கம் : சுப்பிரமணிய சிவா
 
பாடல் வரிகள் :

ஆண்: பேருந்தில் நீ எனக்கு ஜன்னலோரம்
                பின் வாசல் முற்றத்திலே துளசி மாடம்

பெண்: பேருந்தில் நீ எனக்கு ஜன்னலோரம்
                 பின் வாசல் முற்றத்திலே துளசி மாடம்

ஆண்: விடுமுறை நாட்களில் பள்ளிக்கூடம்
               விளையாட்டுப் பிள்ளைகளின் செல்ல கோபம்

பெண்: ஆளில்லா நள்ளிரவில் கேட்கும் பாடல் அன்பே அன்பே நீயே   (பேருந்தில்..)
 

சரணம் - 1
 

ஆண்: பயணத்தில் வருகிற சிறு தூக்கம்
               பருவத்தில் வருகிற முதல் கூச்சம்

பெண்: பரிட்சைக்கு படிக்கிற அதிகாலை
                கழுத்தினில் விழுந்திடும் முதல் மாலை

ஆண்: புகைப்படம் எடுக்கையில் திணறும் புன்னகை
               அன்பே அன்பே நீதானே
               அடைமழை நேரத்தில் பருகும் தேநீர்
                அன்பே அன்பே நீதானே

பெண்: தினமும் காலையில் எனது வாசலில்
                கிடக்கும் நாளிதழ் நீதானே                              (பேருந்தில்..)


சரணம் - 2

ஆண்: தாய் மடி தருகிற அரவணைப்பு
                உறங்கிடும் குழந்தையின் குறுஞ்சிரிப்பு

பெண்: தேய்பிறை போல் படும் நகக் கணுக்கள்
                 வகுப்பறை மேஜையில் இடும் கிறுக்கல்

ஆண்: செல்ஃபோன் சிணிங்கிட குவிகிற கவனம்
               அன்பே அன்பே நீதானே
               பிடித்தவர் தருகிற பரிசுப் பொருளும்
              அன்பே அன்பே நீதானே

பெண்: எழுதும் கவிதையின் எழுத்துப் பிழைகளை
                ரசிக்கும் வாசகன் நீதானே                          (பேருந்தில்...)


அந்த பாடலையும் பாருங்கள்..




நண்பர்களே...  இனி உங்கள் வேலை...
வாக்களித்து.. பின்னூட்ட்ம்  அளித்து என் பணி சிறக்க உதவுங்கள்..

Wednesday, February 2, 2011

ஒரு பண்பாடு இல்லையென்றால்...


பாடலுக்கான சூழ்நிலை :

பட்டணத்துக்கு நடிக்க ஆசைப்ட்டு  தவறான ஒருக்கு உதவிசெய்ய அரண்மனையில் வேலைக்கு ‌சேறுகிறார் நாயகன் (ரஜினி). அங்கு ஆள்மாறட்டம் செய்து இருந்தாலும் இவர் தவறு செய்யாமல் இருக்கிறார். அந்த வீட்டில் இர்ந்துக் கொண்டு அங்கு நடக்கும் அநியாயங்களை தட்டிக் கேட்கிறார்.. அப்படியிருக்க அந்த வீட்டில் இருக்கும் மூத்த மகள் தன் பிறந்த நாளை நாயகனுக்கு தெரியாமல் நண்பர்களுடன் போதை? ஆடல் பாடலுடன் கொண்டாடுகிறார். இதை பார்க்கும் இளைஞர்கள் இப்படி குடித்து விட்டு தன்னை மறந்து தன்னுடைய பண்பாட்டை மறந்து இப்படி கெட்டுப் போகிறார்களே.. என்று மனநொந்து பாடுவதாத இந்த பாடல் அமைந்துள்ளது...

பாடல் விளக்கம் :

மேலை நாட்டு கலாச்சாரம் எவ்வாறு நமது நாட்டில் புற்று நோய் போல மெல்ல மெல்ல நமது பண்பாட்டை சீரழித்து வருவதை எளிமையான பாடல் வரிகளில் அமைத்துள்ளார் கவிப்பேரரசு.

புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் பெண்களும் ஆண்களும் அநாகரிகமாக குத்தாட்டம் போடுவதும், மது பானங்கள் குடிப்பதும், வயது வித்தியாசம் இல்லாமல் கூத்தடிப்பதும் கலாச்சார சீரழிவின் உச்ச கட்டம்.

இப்படி நம் தேசத்திற்கு என்று இருக்கும் பண்பாட்டை மறந்து இப்படியிருக்கிறார்களே என்று வேதனைப்படுவதாக உள்ளது தீய பழக்கமானது முதலில் சாதாரனமாக வந்து பின்பு அது நம்மை அடிமைப்படுத்திவிடும் என்று கவிப்பேரரசு மிகவும் தெளிவாக குறிப்பிட்டு இருப்பார்...

பொதுவாக பாவத்தை போக்க கங்கையில் குளிப்போம் ஆனால் பண்பாடு தவறியவர்கள் கங்கையில் குளித்தால் அந்த கங்கையே அழுக்காகி விடும் என்ற வரிகள் இந்த பாடலை உச்சத்தில் வைக்கிறது..
மயக்கம் என்பது ஒரு மாத்திரையில் இல்லை விளக்குள் இறுந்தும் இப்படி இருட்டுக்குள் வாழ்வது சரியா? தம் தேசம் உன்னை அழைத்துக் கொண்டிருக்கிறது ஏன் இப்படி கொட்டுப்போகிறாய் என்று அந்த பாடல் விளக்குகிறது..

‌‌ஜேசுதால் குரலில் மிகவும் இனியாக இருக்கும் இந்தபாடல் ஒரு பங்ளாவில் படமாக்கப்பட்டிருக்கும். காட்சிகள் வரி‌களட நம்மை கண்டிப்பாக ஆட்கொள்ளும்..

பாடல் விவரம் :

படம்: ராஜா சின்ன ரோஜா
இசை: சந்திரபோஸ்
பாடியவர்: KJ ஜேசுதாஸ்
வரிகள்: வைரமுத்து
‌வெளிவந்த ஆண்டு : 1989

அந்த பாடல் வரிகள் :

ஒரு பண்பாடு இல்லையென்றால் பாரதம் இல்லை
நம் பண்போடு வாழ்ந்திருந்தால் பாவமும் இல்லை
சிறகில்லாமல் தள்ளாடும் செல்ல கிளிகள்
என் கண்ணோரம் இப்போது கண்ணீர் துளிகள்  (ஒரு பண்பாடு..)

வளர்ந்து வராத பிறை இல்லை
வடிந்து விடாத நுரை இல்லை
திரும்பி வராத பகல் இல்லை
திருந்திவிடாத மனம் இல்லை
ஒரு நாள் சுவைப்போம் என்று நினைத்தால்
ஒரு நாள் சுவைப்போம் என்று நினைத்தால்
உயிரை சுவைக்கும் பொய் இல்லை
இதை இன்பம் என்பது இழக்காகும்
நீ குளித்தால் கங்கை அழுக்காகும்   (ஒரு பண்பாடு..)

மயக்கம் என்பது மாத்திரையா
மரணம் போகும் யாத்திரையா
விளக்கு இருந்தும் இருட்டரையா
விடிந்த பின்னும் இருட்டறையா
வரம்பு கடந்து நரம்பு தளர்ந்து
வரம்பு கடந்து நரம்பு தளர்ந்து
இந்த உலகம் உன்னை அழைக்கிறது
அட இன்னும் வாழ்க்கை இருக்கிறது  (ஒரு பண்பாடு..)
 
அந்தப்பாடலையும் பாருங்களேன்..


கண்டிப்பாக 
ஓட்டுகளும்.. பின்னுட்டமும் நம்மை ஒண்றினைக்கும்...

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...