Wednesday, May 15, 2013

ஒரு பண்பாடு இல்லையென்றால்...


பாடலுக்கான சூழ்நிலை :

பட்டணத்துக்கு நடிக்க ஆசைப்ட்டு  தவறான ஒருக்கு உதவிசெய்ய அரண்மனையில் வேலைக்கு ‌சேறுகிறார் நாயகன் (ரஜினி). அங்கு ஆள்மாறட்டம் செய்து இருந்தாலும் இவர் தவறு செய்யாமல் இருக்கிறார். அந்த வீட்டில் இர்ந்துக் கொண்டு அங்கு நடக்கும் அநியாயங்களை தட்டிக் கேட்கிறார்.. அப்படியிருக்க அந்த வீட்டில் இருக்கும் மூத்த மகள் தன் பிறந்த நாளை நாயகனுக்கு தெரியாமல் நண்பர்களுடன் போதை? ஆடல் பாடலுடன் கொண்டாடுகிறார். இதை பார்க்கும் இளைஞர்கள் இப்படி குடித்து விட்டு தன்னை மறந்து தன்னுடைய பண்பாட்டை மறந்து இப்படி கெட்டுப் போகிறார்களே.. என்று மனநொந்து பாடுவதாத இந்த பாடல் அமைந்துள்ளது...

பாடல் விளக்கம் :

மேலை நாட்டு கலாச்சாரம் எவ்வாறு நமது நாட்டில் புற்று நோய் போல மெல்ல மெல்ல நமது பண்பாட்டை சீரழித்து வருவதை எளிமையான பாடல் வரிகளில் அமைத்துள்ளார் கவிப்பேரரசு.

புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் பெண்களும் ஆண்களும் அநாகரிகமாக குத்தாட்டம் போடுவதும், மது பானங்கள் குடிப்பதும், வயது வித்தியாசம் இல்லாமல் கூத்தடிப்பதும் கலாச்சார சீரழிவின் உச்ச கட்டம்.

இப்படி நம் தேசத்திற்கு என்று இருக்கும் பண்பாட்டை மறந்து இப்படியிருக்கிறார்களே என்று வேதனைப்படுவதாக உள்ளது தீய பழக்கமானது முதலில் சாதாரனமாக வந்து பின்பு அது நம்மை அடிமைப்படுத்திவிடும் என்று கவிப்பேரரசு மிகவும் தெளிவாக குறிப்பிட்டு இருப்பார்...

பொதுவாக பாவத்தை போக்க கங்கையில் குளிப்போம் ஆனால் பண்பாடு தவறியவர்கள் கங்கையில் குளித்தால் அந்த கங்கையே அழுக்காகி விடும் என்ற வரிகள் இந்த பாடலை உச்சத்தில் வைக்கிறது..
மயக்கம் என்பது ஒரு மாத்திரையில் இல்லை விளக்குள் இறுந்தும் இப்படி இருட்டுக்குள் வாழ்வது சரியா? தம் தேசம் உன்னை அழைத்துக் கொண்டிருக்கிறது ஏன் இப்படி கொட்டுப்போகிறாய் என்று அந்த பாடல் விளக்குகிறது..

‌‌ஜேசுதால் குரலில் மிகவும் இனியாக இருக்கும் இந்தபாடல் ஒரு பங்ளாவில் படமாக்கப்பட்டிருக்கும். காட்சிகள் வரி‌களட நம்மை கண்டிப்பாக ஆட்கொள்ளும்..

பாடல் விவரம் :

படம்: ராஜா சின்ன ரோஜா
இசை: சந்திரபோஸ்
பாடியவர்: KJ ஜேசுதாஸ்
வரிகள்: வைரமுத்து
‌வெளிவந்த ஆண்டு : 1989

அந்த பாடல் வரிகள் :

ஒரு பண்பாடு இல்லையென்றால் பாரதம் இல்லை
நம் பண்போடு வாழ்ந்திருந்தால் பாவமும் இல்லை
சிறகில்லாமல் தள்ளாடும் செல்ல கிளிகள்
என் கண்ணோரம் இப்போது கண்ணீர் துளிகள்  (ஒரு பண்பாடு..)

வளர்ந்து வராத பிறை இல்லை
வடிந்து விடாத நுரை இல்லை
திரும்பி வராத பகல் இல்லை
திருந்திவிடாத மனம் இல்லை
ஒரு நாள் சுவைப்போம் என்று நினைத்தால்
ஒரு நாள் சுவைப்போம் என்று நினைத்தால்
உயிரை சுவைக்கும் பொய் இல்லை
இதை இன்பம் என்பது இழக்காகும்
நீ குளித்தால் கங்கை அழுக்காகும்   (ஒரு பண்பாடு..)

மயக்கம் என்பது மாத்திரையா
மரணம் போகும் யாத்திரையா
விளக்கு இருந்தும் இருட்டரையா
விடிந்த பின்னும் இருட்டறையா
வரம்பு கடந்து நரம்பு தளர்ந்து
வரம்பு கடந்து நரம்பு தளர்ந்து
இந்த உலகம் உன்னை அழைக்கிறது
அட இன்னும் வாழ்க்கை இருக்கிறது  (ஒரு பண்பாடு..)
 
அந்தப்பாடலையும் பாருங்களேன்..


கண்டிப்பாக 
ஓட்டுகளும்.. பின்னுட்டமும் நம்மை ஒண்றினைக்கும்...

Monday, August 22, 2011

மேகம் சுரக்கும் பால்...இதில் தைரியமாய் நனையலாம்....


படத்தில் பாடலுக்கான சூழல் :

நாயகன் (அரவிந்தசாமி) தன்னுடைய அண்ணன் (பிரகாஷ்ராஜ்) சொல்லுக்கு கட்டுப்பட்டு திருட்டு வேலையை செய்து வருபவர். அப்படி ஒரு இடத்தில் இரவில் திருட செல்லும்போது உறங்கிக் கொண்டிருக்கும் நாயகியை பார்க்கிறார். அங்கு நாயகியின் டைரியை அவருக்கு தெரியாமல் எடுத்துக் கொண்டு வந்துவிடுகிறார். அந்த டைரியில் நாயகி எழுதி வைத்திருக்கும் கவிதைதான் இந்த பாடல் என சித்தரிக்கப்பட்டிருக்கிறது.

நாயகியை கவர்வதற்க்காக அவருக்கு தெரியாமல் ஒரு நாள் மழையில் நாயகியின் கவிதையை நாயகன் பாடலாக பாடும் படி படக்காட்சிகள் அமைந்துள்ளன. அந்த பாடலை பாடும் நாயகனை நாயகி பின்தொடர்ந்து வருவார்.

பாடலுக்கான விளக்கம் :

வைரமுத்துவிடம் ஒரு காட்சி விளக்கப்பட்டப்பின் அந்தகாட்சியில் மிகவும் ஒன்றிவிடுவார். மேலும் அந்த காட்சி அந்த சூழ்நிலை அவற்றைப் பொருத்து அவர்பயன்படுத்தும் வார்த்தைகள் கவிதையின் உச்சமாக இருக்கும் அப்படி அவர் எழுதிய இக்கவிதையும் மழையின் மகிமையை உச்சத்திற்க்கு கொண்டு செல்வதுதான்.
 சிந்தும் இந்த மழைத்துளியை எடுத்து சேர்த்து வைத்து அதை அந்த மின்னல் கொண்டு மாலையாக கோர்த்துவிடலாம். கொட்டுகின்ற மழையை அப்படியே பிடித்து மழை நீரை அருந்தும் சக்கரவாக  பறவைப்போன்று எனக்கும் இந்த மழை பருக ஆசையாக இருக்கிறது.


மழையை ஒரு துளி விழுது என்பார். ஆலமரத்தில் தொங்கும் விழுதுபோன்று வானிலிருந்து ஒரு துளியாய் விழும் இதுவும் ஒரு விழுது என்று பாடலை ஆரம்பிக்கிறார். இந்த விழுதுகளை பிடித்து அப்படியே வானில் ஏறிவிடலாம் போலிருக்கிறதே...
 

மழை நீர் மிகவும் சுத்தமானது..  (ஆனால் முதலில் வரும் மழை அமில மழை என்று அறிவியல் கூறுகிறது) அந்த தூய நீர் சேரும் இடத்திற்க்கு ஏற்றார் போல் மாறிவிடும். பூவில் தேனாகவும், சிப்பியில் முத்தாகவும் பாவிப்பது மழை நீர்தான் தற்போது அவர் மீது விழுந்ததால் கவிதையாகவும் மாறிவிடுகிறதாம்.

இந்த இயற்கை அன்னை அனைவரும் குளிக்க அமைத்த மிகப்பெரிய ஷவராம்...  இளைய வயதில் மழையில் நனைவது மிகவும் சுகமானது... இந்த இளைய வயதில் நனையாமல் பிறகு எந்த வயதில் நனைவது என்று ஆதங்கத்துடன் எழுதியுள்ளார்


மழை என்பது தூரல், இடி, சாரல், மேகம், வானவில், என அத்‌தனையும் சுமந்து ஒரு கவிதைப்பேன்று வருகிறது அதை எதிர்த்து கதவடைத்தால் எப்படி... மழைப்பெய்தால் குடைப்பிடிப்போம் அதை கருப்புகொடியாக வர்ணனை செய்கிறார்.


மழை என்பது வான்தேவதை நமக்கெல்லாம் தந்த பரிசு யாரும் திரும்பிக் கொள்ளாதீர்கள்.. நெடுஞ்சாலையில் நனைய எவருடைய சம்மதமும் வேண்டாம்.. மழை ‌என்பது மேகம் சுரந்த பால் அதில் நனைவதற்க்கு ஏன் தயக்கம் அப்படி மழையில் நனையவில்லையென்றால் நாம் வாழ்நாளில் பாதி இழந்ததற்க்கு சமம்.. இந்த கண்களை மூடி நனைந்து இந்த மண்ணில் சொர்க்கம் காண்போம் என உணர்வுப்பூர்வமான வடிக்கப்பட்டுள்ளது இக்கவிதை.
 
பாடலுக்கான விவரங்கள் :


திரைப்படம்: என் சுவாசக் காற்றே
வெளிவந்த வருடம்: 1999
இயற்றியவர்: கவிப்பேரரசு வைரமுத்து
பாடியவர்: எம்.ஜி. ஸ்ரீரிகுமார்
இசையமைப்பாளர்: ஏ.ஆர். ரஹ்மான்

அந்த பாடல் வரிகள் :

சுரம் :
ஒரு துளி விழுது ஒரு துளி விழுது
ஒரு துளி விழுது ஒரு துளி விழுது

ஒரு துளி... இரு துளி...
சிறு துளி... பல துளி...

பல்லவி :
 
சின்னச் சின்ன மழைத்துளிகள்
சேர்த்து வைப்பேனோ
மின்னல் ஒளியில் நூல் எடுத்துக்
கோர்த்து வைப்பேனோ
 
அனு பல்லவி:  

சக்கரவாகமோ மழையை அருந்துமாம்
நான் சக்கரவாகப் பறவையானேனோ
மழையின் தாரைகள் ஈரவிழுதுகள்
விழுது பிடித்து விண்ணில் சேர்வேனோ

(சின்னச் சின்ன மழைத்துளிகள் )

சரணம் : 1

சிறு பூவினிலே விழுந்தால் 
ஒரு தேன்துளியாய் வருவாய்...

சிறு சிப்பியிலே விழுந்தால்
ஒரு முத்தெனவே மலர்வாய்...

பயிர் வேரினிலே விழுந்தால்
நவதானியமாய் விளைவாய்...

என் கண்விழிக்குள் விழுந்ததனால்
கவிதையாக மலர்ந்தாய்
 
அந்த இயற்கை அன்னை படைத்த
ஒரு பெரிய ஷவரிது...

அட இந்த வயது கழிந்தால்
பிறகெங்கு நனைவது...

இவள் கன்னி என்பதை இந்த மழை
கண்டறிந்து சொல்லியது

சக்கரவாகமோ மழையை அருந்துமாம்
நான் சக்கரவாகப் பறவையானேனோ
மழையின் தாரைகள் வைரவிழுதுகள்
விழுது பிடித்து விண்ணில் சேர்வேனோ (சின்ன சின்ன)



சரணம் : 2

மழை கவிதை கொண்டு வருது
யாரும் கதவடைக்க வேண்டாம்

ஒரு கறுப்புக் கொடி காட்டி
யாரும் குடை பிடிக்க வேண்டாம்

இது தேவதையின் பரிசு
யாரும் திரும்பிக் கொள்ள வேண்டாம்

நெடுஞ்சாலையிலே நனைய
ஒருவர் சம்மதமும் வேண்டாம்

அந்த மேகம் சுரந்த பாலில்
ஏன் நனைய மறுக்கிறாய்

நீ வாழ வந்த வாழ்வில்
ஒரு பகுதி இழக்கிறாய்

நீ கண்கள் மூடிக் கரையும் போது
மண்ணில் சொர்க்கம் ஏதுவாய்

நீ கண்கள் மூடிக் கரையும் போது
மண்ணில் சொர்க்கம் மீளுவாய்

சக்கரவாகமோ மழையை அருந்துமாம்
நான் சக்கரவாகப் பறவையானேனோ
மழையின் தாரைகள் வைரவிழுதுகள்
விழுது பிடித்து விண்ணில் சேர்வேனோ

(சின்னச் சின்ன மழைத்துளிகள் )


அந்த பாடல் காட்சி :


தமிழ் பாடலில் ஒளிந்துள்ள அறிய கருத்துக்களை வெளிக்கொணர்க்கே இவ்முயற்ச்சி... என் வேலையை நான் செய்து விட்டேன் ரசித்தவர்கள் தயவு செய்து  கருத்து சொல்லிவிட்டு செல்லுங்கள்.. 
 
அன்பான வாசகர்களே இதை எப்போது படித்தாலும்  தங்களுடைய கருத்தை சொல்லுங்க.. அதுதான் என்னைமேலும் பதிவிட வலுசேர்க்கும்...
இதை தங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்துவையுங்கள்...
நன்றி..! நன்றி...!


Thursday, July 28, 2011

அடத்தமிழா நாளை என்பது யாருக்கு..?

பாடலுக்கான சூழ்நிலை :


ஒரு கிராமத்துப் பெண்ணை திருமணம் செய்துக் கொள்ள ஆசைப்படும் நாயகன் ரிஷி (அரவிந்தசாமி) பூஙகுடி கிராமத்திற்கு சென்று அங்கு அக்காவை ‌ பெண்பார்க்க சென்று, பின்பு அங்கு நடக்கும் பிரச்சனையால் அவளுடைய தங்கையான ரோஜாவை (மது) திருமணம் செய்துக் கொண்டு நகருக்கு வந்து விடுகிறார். பின்பு தேன்நிலவுக்காக காஷ்மீர் பகுதிக்கு செல்கிறார். அங்கு தீவிரவாதிகளால் கடத்தப்படுகிறார். (படத்தின் கதை இந்த கடத்த‌ல் மற்றும் தீவிரவாத ஒழிப்பை மையப்படுத்தி வருகிறது) அப்படி தீவிரவாதிகளின் பிடியில் இருக்கும் போது ஒரு தீவிரவாதியால் இந்திய தேசியக்கொடி தீயிட்டுக் கொளுத்தப்படுகிறது. ‌தேசிய உணர்வுடன் அந்த தீயை அணைத்து ‌தேசியக் கொடியை காப்பது போன்று காட்சி அமைக்கப்பட்டிருக்கும். அந்த காட்சியின் பிண்ணனியில் இப்பாடல் ஒளிபரப்பாகும்.

பாடலுக்கான பொருள் :

தமிழ் மொழி இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, உள்ளிட்ட உலகநாடுகளில்  63+ மில்லியன் மக்களால் பேசப்படுகிறது.  முதல் 20 உலக மொழிகள் பட்டியலில் 18 வது இடம் பிடித்திருக்கிறது.  அப்படி சிறப்பு வாழ்ந்த மொழியைப்பற்றி வைரமுத்து அவர்களால் இயற்றப்பட்டப்பாடல் தான் இது.
 

தமிழனே நாளை நம்முடையது.. இந்த நாடு என்பதும் நம்முடையது. நம்முடைய வீடு எது என்றுக் கேட்டால் அது தமிழ்நாடு என்று சொல்லுங்கள். அதுவே நம்முடைய உணர்வு இந்தியன் என்று இருக்கட்டும்.

இந்தியாவில்  பல்வேறு இனங்கள் நிறைந்துள்ளது ஆனால் குணத்தால் நாம் ஒன்றுப்படுகிறோம். 

அரபியும் விரிகுடாவும் கைகோர்க்கும் கன்னியாகுமரியோ அல்லது இமையத்தில் உயர்ந்து நிற்க்கும் காஷ்மீரோ இடம் ஏதுவாக இருந்தாலும் நிலத்தால் அது ஒன்றாகிறது.

மொழிகள் மாறலாம் பொருளில் மட்டும் ஒன்றாகத்தான் இருக்கிறது. கலி மாறலாம் (கலி என்பது காலத்தை குறிக்கிறது.) இனி எத்தனை ஆண்டுகள் யுகங்கள் மாறினாலும் நம்முடைய தேசியக் கொடி  தேசிய உணர்வு மாறாது.

எட்டு திசைகளில் மாற்றங்கள் இருக்கும் அது எங்கள் நிலத்தை மாற்ற முடியாது. இசைகள் மட்டும் சுரங்கலாம் மாறிப்போகலாம் மொழிகலாள் அவை ஒன்றுதான். நம்முடைய இந்தியா அது ஒன்றுதான்.

தமிழனே கலங்காதே தமிழனாக இருந்தாலும் உனக்குள் இருப்பது இந்திய ரத்தம் ஒன்றான இந்த பாரதம் உன்னைக்காக்கும்.


பாடலின் விவரம் :


திரைப்படம்:   ரோஜா (1992)
பாடல்: தமிழா தமிழா
பாடகர்:  ஹரிஹரன்
இசை:  AR. ரெஹ்மான்
பாடல் ஆசிரியர்:  வைரமுத்து
படத்தின் இயக்கம் : மணிரத்தினம

அந்த பாடல் வரிகள் :
பல்லவி :
தமிழா தமிழா நாளை நம் நாளே
தமிழா தமிழா நாடும் நம் நாடே(2)

என் வீடு தாய் தமிழ் நாடு என்றே சொல்லடா
என் நாமம் இந்தியன் என்றே என்றும் நில்லடா

தமிழா தமிழா நாளை நம் நாளே
தமிழா தமிழா நாடும் நம் நாடே


சரணம் -1

இனம் மாறலாம் குணம் உண்டு தான்
இடம் மாறலாம் நிலம் ஒன்று தான்
மொழி மாறலாம் பொருள் ஒன்று தான்
கலி மாறலாம் கொடி ஒன்று தான்
திசை மாறலாம் நிலம் ஒன்று தான்
இசை மாறலாம் மொழி ஒன்று தான்
நம் இந்தியா அதும் ஒன்று தான்

தமிழா தமிழா கண்கள் கலங்காதே
விடியும் விடியும் உள்ளம் கலங்காதே(2)

உனக்குள்ளே இந்திய ரத்தம் உண்டா இல்லையா
ஒன்றான பாரதம் உன்னை காக்கும் இல்லையா

தமிழா தமிழா நாளை நம்நாளே
தமிழா தமிழா நாடும் நம் நாடே

நவபாரதம் பொதுவானது
இது வியர்வையால் உருவானது...

அந்தப்பாடலிக் காணொலி காட்சி :


அன்பான வாசகர்களே இதை எப்போது படித்தாலும்  தங்களுடைய கருத்தை சொல்லுங்க.. அதுதான் என்னைமேலும்  வலுசேர்க்கும்... 
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி... நன்றி...



Monday, July 4, 2011

பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்கிறது..


தமிழ் திரைப்படத்தில் பாடல்கள் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டாது. பாடல்கள் என்பது படத்தின் கதையை விளக்குவதாகவும், கதாநாயகன் கதாநாயகியின் கதாப்பாத்திரத்தை சொல்லுவதாகவும் இருக்கும். மேலும் காதலை, ஊடலை, புரட்சியை, சோகத்தை, உற்சாகத்தை என அத்தனையும் பாடல்கள் எடுத்துரைக்கிறது. ‌ஆனால் சில பாடல்கள் வாழ்க்கையையும், அதன் தத்துவத்தையும் எடுத்துக்கூறும். தற்போது இதுபோன்ற பாடல்கள் இல்லையென்றாலும் கவியரசர் கண்ணதாசன் அவர்கள் அதற்க்கு குறைவைக்கவில்லை. அவரது பாடல்களில் நவரசங்களை மட்டுமல்லாமல் வாழ்க்கையையும் அதன் தத்துவத்தையும் அவரது பாடல் எடுத்துரைத்து காலத்தால் அழியாமல் வாழ்ந்துக் கொண்டிருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு பாடலைத்தான் இப்போது நாம் பார்க்கப்போகிறோம்.

பாடலுக்கான சூழ்நிலை :

 படத்தின் நாயகன் மோகன் (முத்துராமன்) மற்றும் நாயகி ராதா (ஜெயலலிதா) நடுத்ததரக்குடும்பத்தில் பிறந்வர்கள். இருவரும் சந்தித்து காதலித்து திருமணம் செய்துக் கொள்கின்றனர். நாயகன் மிகவும் தன்மானம் மிக்கவராகவும், தன்னுடைய சொந்தக்காலில் நிற்கவேண்டும். தன்னுடைய குடும்பத்தை தன்னுடைய முயற்ச்சியில் நிலைநிறுத்த நினைக்கிறார். ஆனால் அதற்க்கு ஏற்ற வேலை கிடைக்கவில்லை. ஆனால் அதற்கு மாறாக  நாயகி வேலைக்கு சென்று சம்மாதித்து ‌‌அந்த குடும்பத்துக்கு நன்றாக பார்த்துக் கொள்கிறார்.

ஒரு கட்டத்தில் நாயகன் தன்னுடைய இயலாமையை கண்டும் தன்னைவிட அதிக சம்பளம் வாங்கும் தன்னுடைய மனைவின் மீது கோவம் கொண்டு அவமதிக்கிறார். மனதளவில் பிரிந்து வாடும் அவர்கள் ஒரு இசை நிகழ்ச்சிக்கு தனித்தனியே கிடைத்த அழைப்பை ஏற்று செல்கின்றனர். அந்த இசை நிகழ்ச்சியில் பாடப்படுவது போன்று இந்த பாடல் அமைந்துள்ளது.


இந்தப்பாடல் கதையில் வரும் இந்த ஜோடியின் நிலையை பிரிதிப்பலிப்பது போன்று இந்த பாடல் அமைந்துள்ளது. இந்த பாடலை அதை எழுதிய கவிஞர் கண்ணதாசன் அவர்கள் பாடுவது போன்று படமாக்கப்பட்டிருக்கும். கவிஞர் இந்தப்பாடலை அழகிய முகபாவனைகளுடன் படத்தில் பாடியிருப்பார்.


பாடலுக்கான விளக்கம் :

பொதுவாக ஒருவருடைய மனநிலையானது இரட்டைவேடம் போடும். அது ஒரு இடத்தில் பலமாகவும்.. ஒரு இடத்தில் பலவீனமாகவும் காணப்படும். அப்படி பலாமாக இருக்கும் இடத்தில் இருந்துக்கொண்டு ஆணவப்படக்கூடாது. 


பாம்பு என்றால் அது கருடனை பார்த்து பயந்து ஓடும். ஆனால் அது சிவனுடைய கழுத்தில் இருந்துக் கொண்டு கருடனையே சௌக்கியமா ‌என்று கேட்கிறதாம்... எவ்வளவு ஆணவம்.. இருக்கும் இடத்தில் இருந்தால் அந்த பாதுகாப்பு வந்து விடும் என்று கருடன் பதிலளிக்கிறது.


இந்த உலகாமானது நாம் வெற்றியடையும் போதும், உயர்ந்த நிலைக்கும் செல்லும் போதும், சாதனைகள் செய்யும் போது வந்து வாழ்த்தி விட்டுச் செல்லும் ஆனால் நம்முடைய கிரிடங்கள் கழட்டப்பட்டுவிட்டதெனில் இருந்து  சீராட்டியவர்கள் சிதறிப்போவார்கள். எங்கு நமக்கு மதிப்பு இல்லையோ, எங்கு நம் வார்த்தைகள் எடுபடவில்லையோ அந்த வாசற்படியை மிதிப்பது அவ்வளவு சரியானது அல்ல.

வாழ்க்கையானது கணவன் மனைவி என்ற இரண்டு சக்கரங்கள் இருந்தால் தால் தான் சீராகச் செல்லும். அப்படி இல்லாமல் நான் பெரியவன், நான் பெரியவள் என்ற வாதம் துவங்கி விட்டால் அந்த வீட்டில் பருவக்காலங்கள் இல்லாமலே புயல் மையம் கொண்டு விடும். அளவுக்கு மீறிய அன்பும் ஆபத்துதான் அதனால் எல்லாற்றிவும் ஒரு அளவோடு இருக்க வேண்டும்.


நிலவும் வானும் எப்போதும் சேர்ந்து இருப்பது. ஆனால் ஆது பிரிவு ஏற்ப்பட்டுவிட்டால் நிலவுமட்டுமே தேயும் வானமானது நீண்டுக்கொண்டே ‌போகும். இந்த உவமை கதைக்கு ஏற்றார் போல் பொருந்திவரும்படி கவிஞர் பாடலை எழுதியுள்ளார். இல்லாதான் இல்லாழ்க்கையில் தாம்பத்தியம் தவிர வேறொன்றும் மகிழ்ச்சியை கொடுக்காது. என்னுள்ளமே என்னைப்பார்த்து கேலி செய்கிறது. என்று கணவன் சொல்வதில் அர்த்தம் இருக்கிறது.


பொதுவான ஒரு ஆணின் தலைமையில் குடும்பம் இருக்கும் போதுதான் அவனுக்கு பெருமை. அதைவிடுத்து மனைவியின் தயவில் வாழ்வது என்பது மிகவும் அவமானமாக தெரியும். படத்தின் கதைப்படி இதே மனநிலையில் இருப்பதால் அவரின் மனநிலையை பாடல் எடுத்துரைக்கிறது.



பாடலுக்கான விவரம் :

படம் : சூரியகாந்தி
 

இசை : M.S. விஸ்வநாதன்
 

பாடியவர் : T.M. சௌந்தர்ராஜன்
 

பாடல் வரிகள் : கண்ணதாசன்
 

படத்தின் இயக்கம் : வி. சீனிவாசன்.

படம் வெளிவந்த வருடம் : 1973


பாடல் வரிகள் :

பல்லவி :

பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது
கருடா சௌக்கியமா (2)
யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்
எல்லாம் சௌக்கியமே.. கருடன் சொன்னது..
அதில் அர்த்தம் உள்ளது.
 
சரணம் - 1
 
உயர்ந்த இடத்தில் இருக்கும் போது
உலகம் உன்னை மதிக்கும்
உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால்
நிழலும் கூட மிதிக்கும்   (2)

மதியாதார் தலைவாசல் மிதிக்காதே என்று
மானமுள்ள மனிதனுக்கு ஔவை சொன்னது
அது ஔவை சொன்னது.. அதில் அர்த்தம் உள்ளது  (பரமசிவன்

சரணம் - 2.

வண்டி ஓட சக்கரங்கள் இரண்டு மட்டும் வேண்டும்
அந்த இரண்டில் ஒன்று சிறியதென்றால்
எந்த வண்டி ஓடும்
 
உனை போலே அளவோடு உறவாட வேண்டும்
உயர்ந்தோரும் தாழ்ந்தோரும் உறவு கொள்வது
அது சிறுமை என்பது.. அதில் அர்த்தம் உள்ளது

சரணம் - 3

நீயும் நானும் சேர்ந்திருந்தோம் நிலவு வானம் போலே
நான் நிலவு போல தேய்ந்து வந்தேன் நீ வளர்ந்ததாலே  (2)

என் உள்ளம் எனை பார்த்து கேலி செய்யும் போது
இல்லாதான் இல்வாழ்வில் நிம்மதி ஏது
இது கணவன் சொன்னது.. இதில் அர்த்தம் உள்ளது  (பரமசிவன் 

அந்தப்பாடல் :

 

அன்பான வாசகர்களே இதை எப்போது படித்தாலும்  தங்களுடைய கருத்தை சொல்லுங்க.. அதுதான் என்னைமேலும் பதிவிட வலுசேர்க்கும்...
இதை தங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்துவையுங்கள்...
நன்றி... நன்றி...

Monday, May 2, 2011

அத்திக்காய் ஆலங்காய் வெண்ணிலவே.....

பாடலுக்கான சூழ்நிலை :
 

இத்திரைப்படத்தில் சிவாஜி மூன்று வேடம் ஏற்றிருப்பார். அதில் ஒரு வேடம் ‌அப்பாவி பாண்டியன் பாத்திரம். தற்கொலைக்கு முயன்று பின் காப்பாற்றப்பட்டு, நாயகி தேவிகாவை விரும்புவார். அதே போல் சிவாஜியின் தங்கை‌யான நடிகை வசந்தியும் இவரின் காதலராகவும் சிவாஜியின் நண்பனாகவும் நடித்திருப்பவர் பாலாஜி. (இவருதாங்க அஜித் பில்லாவின் தயாரிப்பாளர்) பல்வேறு கலாட்டாவிற்கு பிறகு இந்த இரு ஜோடியும் தனியே வந்து  ஒரே பந்தலில் திருமணம் செய்துக் கொள்கின்றனர். அன்று இரவு நடக்கும் முதலிரவில் செல்ல கோவத்துடன் இந்த இரு ஜோடியும் பாடும் படி இந்த பாடல் அமைந்துள்ளது.

பாடலுக்கான விளக்கம் :

கவியரசர் கண்ணதாசன் தான் பாடல்களில் செலுத்துகின்ற ஆட்சி பாராட்டுக்குரியது. அவருடைய பாடல்கள் காலங்கள் தாண்டியும் வாழக்கூடியது. அவர் எழுதிய பாடலின் விளக்கத்தை தர முன்வருகிறேன். (இது என் அறிவுக்கு எட்டியதுதான். ஏதாவது தவறாக ‌இருந்தால் மன்னிக்கவும்) இப்பாடல் ஏதோ காய் கறிகளை பற்றி பாடப்பட்டது போல் இருக்கும் உண்மையில் அர்த்தம் அலுவல்ல... தலைவன் மீது கோவம் கொண்ட தலைவியும், தலைவி மீது கோவம் கொண்ட தலைவனும், மாறி மாறி செல்லமாய் தண்டிக்கச் சொல்வது போல் இருக்கும்

பெ : அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே
இத்திக்காய் காயாதே என்னைப் போல் பெண்ணல்லவோ?

அத்திக்காய் என்பது அத்திமரத்தில் காய்க்ககூடிய ஒருகாய்.. ஆனால் பாடலில் அத்திக்காய் என்பது திக்கு என்பதற்கு திசை, பக்கம், என்ற அர்த்தங்கள் இருக்கிறது ‌அத்திக்காய் என்றால் அந்த பக்கம் காய்.. காய் என்பது காய்தல் (வெயில் காய்கிறது போன்று இதில் நிலவு) ஆலங்காய். ஆலங்காய் என்பது மிகவும் கசப்பு தன்மைக் கொண்டது கசக்கும் வெண்ணிலவே என்னை காயாதே... அல்லது ஆலங்காய் என்பதின் இன்னோரு அர்த்தம் ஆலம் என்றால் விஷம் என்று அர்த்தம். விஷம் போல காய்கின்ற வெண்ணிலவே என்று பெருள்படுகிறது. இத்திக்காய் என்றால் இந்தப்பக்கமாய் காயதே நான் உன்னைப்போல் பெண்ணல்லவா என்று நாயகி கூறுகிறார்.  

பெ : கன்னிக்காய் ஆசைக்காய் காதல் கொண்ட பாவைக்காய்
அங்கே காய் அவரைக் காய் மங்கை என்தன் கோவைக்காய்


(கன்னிக்காய்=  கன்னிக்காக, ஆசைக்காய் = ஆசைக்காக)
கன்னியாகிய நான் ஆசைகொண்டு காதல் கொண்ட இந்த பெணணுக்காக (பாவை என்றால் பெண் என்று அர்த்தம்.) அதோ அங்கே சென்று அவரைக் காய்... மங்கை என்தன் கோவைக்காய்.. கோ-என்றால் தலைவன், மன்னன் என்று பொருள்.. அதாவது என்னுடைய தலைவனை காய் என்று பொருள்.

ஆ : மாதுளங்காய் ஆனாலும் என்னுளம் காயாகுமோ?
என்னை நீ காயாதே என்னுயிரும் நீயல்லவோ?


மாதுளங்காள் ஆனாலும் என்பது (மாது+உள்ளம்=மாதுள்ளம்) அவளுடைய உள்ளம் காயாக இருக்கலாம் அதாவது என்னை தவறாக நினைக்கலாம் ஆனால் என்னுள்ளம் அதுபோல் இல்லை. நிலவே என்னை நீ காயாதே நீயும் என் உயிர் அல்லவா.

ஆ : இரவுக்காய் உறவுக்காய் ஏங்கும் இந்த ஏழைக்காய்
நீயும் காய் நிதமும் காய் நேரில் நிற்கும் இவளைக் காய்
 
இரவில் நடக்கும் அந்த கூடலுக்காக அதாவது இரவுக்காகவும், அந்த உறவுக்காகவும் ஏங்கும் இந்த ஏழைக்காக உன் நேரில் நிற்கும் எப்போதும் அவளை உன் கதிர்கலால் சுடு (காய்)

பெ : உருவங்காய் ஆனாலும் பருவங்காய் ஆகுமோ?
என்னை நீ காயாதே என்னுயிரும் நீயல்லவோ?

மன்னவனே என்னுடைய உருவம்தான் வெறுப்பது போன்று உள்ளது அதாவது உருவம் காய் போல் உள்ளது ஆனால் என் பருவம் அப்படியில்லை. என் உயிரான என் நிலவே என்னை காயாதே. எப்போதும் என்னுயிரும் நீயல்லவா?

பெ : ஏலக்காய் வாசனை போல் எங்கள் உள்ளம் வாழக்காய்
ஜாதிக்காய் பெட்டகம் போல் தனிமையில் இன்பம் கனியக் காய்

நிலவே... ஏலக்காய் போன்று வாசனையுடன் எங்கள் உள்ளத்தை வாழ வை. வாழக்காய் என்பது வாழ்வதற்காக காய். என்று அர்த்தம். ஜாதிக்காய்ப்போன்று தனிமையில் அதை கனிய விடுவது போன்று எங்களை தனிமையில் இன்பம் காண விடு என்று நிலவிடம் காதலி விண்ணப்பமிடுகிறார்.

ஆ : சொன்னதெல்லாம் விளங்காயோ தூதுவளங்காய் வெண்ணிலா
என்னை நீ காயாதே என்னுயிரும் நீயல்லவோ?

ஓ.. நிலவே இப்போது சொன்னதெல்லாம் விளங்கிற்றா.? ஏன் இப்படி நாங்கள் சொல்வதை புரிந்துக் கொள்ளாமல் இருக்கிறாய் . தூதுவளங்காய் என்பது தூது விளங்காத என்று பொருள்படும். இவ்வளவு சொல்லியும் என்னை நீ காயப்போகிறாயா? என்னை நீ வெறுக்காதே அன்பே நான் என்பது நீ அல்லவா.

ஆ :உள்ளமெலாம் மிளகாயோ ஒவ்வொரு பேச்சுரைக்கயோ?
        வெள்ளரிக்காய் பிளந்தது போல் வெண்ணிலவே சிரிக்காயோ?
 

உன் உள்ளம் என் இளகாதோ (மி என்பதை ம்+இ என்று பிரிப்படும்)  ஏன் மிளகாய் போன்று ஓவ்வோறு பேச்சிலும் உறைக்கிறாய் (காரம்). என்று இரு பொருள்படும். இதைப் பார்த்து ஏன் வெண்ணிலவே சிரிக்கிராய் பிறையானது சிரிப்பு சின்னமாக வெள்ளரியை பிளந்தது போல் இருக்கிறதாம்.

பெ : கோதையெனைக் காயாதே கொத்தவரங்காய் வெண்ணிலவே
‌ஆ : இருவரையும் காயாதே தனிமையிலேங்காய் வெண்ணிலா 

கோதை என்னை காயாதே என்னை கொத்த வரும் வெண்ணிலவே நாங்கள் இருவரும் அன்பை பரிமாறிக் கொள்ள போகிறோம். ஆகையால் எங்கள் இருவரையும் காயாதே நீ தனிமையிலே ஏங்காதே வெண்ணிலவே.
என்று இந்தபாடல் முடிகிறது.


பாடலுக்கான விவரம் :



பாடல்: அத்திக்காய் காய் காய்
திரைப்படம்: பலே பாண்டியா  (1962)
இந்த பாடலில் நடித்திருப்பவர்கள் : சிவாஜி, தேவிகா, பாலாஜி, வஸந்தி.

படியவர்: டி.எம். சௌந்தரராஜன், பி.சுசீலா, 
பி.பி. ஸ்ரீனிவாஸ், ஜமுனா ராணி
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி

அந்த பாடல் வரிகள் :



பல்லவி :
பெ : அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே
          இத்திக்காய் காயாதே என்னைப் போல் பெண்ணல்லவோ?

‌ஆ : அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே
         இத்திக்காய் காயாதே என்னுயிரும் நீயல்லவோ?
         என்னுயிரும் நீயல்லவோ?
        அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே..

பெ : ஓஓஓ..ஓஓஓ..

சரணம் : 1 


பெ : கன்னிக்காய் ஆசைக்காய் காதல் கொண்ட பாவைக்காய்
          அங்கே காய் அவரைக் காய் மங்கை என்தன் கோவைக்காய்
          கன்னிக்காய் ஆசைக்காய் காதல் கொண்ட பாவைக்காய்
          அங்கே காய் அவரைக் காய் மங்கை என்தன் கோவைக்காய்

ஆ :  மாதுளங்காய் ஆனாலும் என்னுளம் காயாகுமோ?
          என்னை நீ காயாதே என்னுயிரும் நீயல்லவோ?

பெ : இத்திக்காய் காயாதே என்னைப் போல் பெண்ணல்லவோ?

பெ : ஓ.. ஓ... ஓ.. ஆஹா.. ஆஹா.. 

சரணம் : 2 

ஆ : இரவுக்காய் உறவுக்காய் ஏங்கும் இந்த ஏழைக்காய்
         நீயும் காய் நிதமும் காய் நேரில் நிற்கும் இவளைக் காய்
         இரவுக்காய் உறவுக்காய் ஏங்கும் இந்த ஏழைக்காய்
         நீயும் காய் நிதமும் காய் நேரில் நிற்கும் இவளைக் காய்

பெ : உருவங்காய் ஆனாலும் பருவங்காய் ஆகுமோ?
          என்னை நீ காயாதே என்னுயிரும் நீயல்லவோ?

இரு :அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே
            இத்திக்காய் காயாதே என்னுயிரும் நீயல்லவோ?

இரு : ஆஹா..ஆஹா. ஆஹா.. ஆஹா.. 

சரணம் : 3 

பெ : ஏலக்காய் வாசனை போல் எங்கள் உள்ளம் வாழக்காய்
           ஜாதிக்காய் பெட்டகம் போல் தனிமையில் இன்பம் கனியக் காய்
           ஏலக்காய் வாசனை போல் எங்கள் உள்ளம் வாழக்காய்
           ஜாதிக்காய் பெட்டகம் போல் தனிமையில் இன்பம் கனியக் காய்

ஆ : சொன்னதெல்லாம் விளங்காயோ தூதுவளங்காய் வெண்ணிலா
         என்னை நீ காயாதே என்னுயிரும் நீயல்லவோ?

இரு : அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே
             இத்திக்காய் காயாதே என்னுயிரும் நீயல்லவோ?

இரு : ஆஹா..ஆஹா. ஆஹா.. ஆஹா.. 

சரணம் : 4 

ஆ :உள்ளமெலாம் மிளகாயோ ஒவ்வொரு பேச்சுரைக்கயோ?
        வெள்ளரிக்காய் பிளந்தது போல் வெண்ணிலவே சிரிக்காயோ?
        உள்ளமெலாம் மிளகாயோ ஒவ்வொரு பேச்சுரைக்கயோ?
        வெள்ளரிக்காய் பிளந்தது போல் வெண்ணிலவே சிரிக்காயோ?

பெ : கோதையெனைக் காயாதே கொத்தவரங்காய் வெண்ணிலவே
‌ஆ : இருவரையும் காயாதே தனிமையிலேங்காய் வெண்ணிலா

இரு : அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே
            இத்திக்காய் காயாதே என்னுயிரும் நீயல்லவோ?

ஆஹாஹா ஆஹா ஓஹோஹோ ஹோஹோ ம்ஹ்ம்ம் ம்ம்
 அந்த பாடலையும் ஒரு முறை பாருங்கள் :
 

தமிழ் பாடலில் ஒளிந்துள்ள அறிய கருத்துக்களை வெளிக்கொணர்வதே என் வேலை... என் வேலையை நான் செய்து விட்டேன் ரசித்தவர்கள் தயவு செய்து  கருத்து சொல்லிவிட்டு செல்லுங்கள்..
 
அன்பான வாசகர்களே இதை எப்போது படித்தாலும்  தங்களுடைய கருத்தை சொல்லுங்க.. அதுதான் என்னைமேலும் பதிவிட வலுசேர்க்கும்...
இதை தங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்துவையுங்கள்...
நன்றி... நன்றி...


வாவ் என்று இத்தளத்தைவலைச்சரத்தில் அறிமுகம் செய்த தோழி ஆனந்தி அவர்களுக்கும்..
Xxtraordinary Blogger Award வழங்கிய தோழி சிநேகிதிக்கும்
பாட்டு ரசிகனின் நன்றிகள்...


Thursday, April 21, 2011

வெண்மேகம் பெண்ணாக உருவானதோ..

பாடலின் சூழ்நிலை :
 

நாயகன் (தனுஷ்) நாயகி (நயன்தாரா) ஒரே அலுவலகத்தில் வேலை செய்கிறார்கள். நாயகன் வேலைக்கு சேரும்போது நாயகி அவரது மனதை கவர்கிறார். பின்பு ஒருதலையாக காதலிக்கிறார். நாயகன் தனது காதலை சொல்ல அவள் மறுத்துவிடுகிறார். தன்னுடைய மகனுக்கு உதவ நாயகன் தந்தை (ரகுவரன்) நாயகியிடும் பேசுகிறார். அவள் அவரை அவமானம் செய்து விட அவர் மனமொடிந்து இறந்து விடுகிறார். மிகவும் மனமொடிந்துப்போகும் நாயகன் சோகத்தில் உறைந்துப்போகிறார்.

நாயகனின் சூழ்நிலையை பார்த்த நாயகனின் நண்பர் இந்த கவலையை மறக்க அவரை தன்னுடைய கிராமத்திற்கு அழைத்து செல்கிறார். அங்கு சென்ற பிறகுதான் தெரியது நாயகியும்  நண்பரும் சொந்தம் என்று.. தன் தந்தை சாவுக்கு காரணமாவர்... தன் காதலை ஏற்றுக்கொள்ள வில்லை...  சூழ்நிலை காரணமாக அந்த கிராடத்தில் தங்க நேர்கிறது. தன் வலியை அந்த வீட்டில் நடக்கும் ஒரு நிகழ்ச்சியில் பாடுவது போன்று இப்பாடல் அமைந்துள்ளது.

பாடலுக்கான பொருள் :
 
காதல் தோல்வி பாடல்கள் தமி்ழ்திரையில் எவ்வளவோ இருந்தாலும் இந்தப்பாடல் மிகவும் ரசிக்கும்படியிருந்தது.

வெண்மேகம் போன்று இந்த பூமியில் வந்தவ‌ளே உன்னைப்பார்த்ததும் இந்த நெஞ்சம் உன்னை கொண்டாடுகிறது. நீ ஒரு பார்வை பார்த்துவிடு. ஒரு வார்த்தை செல்லிவிடு உன்னால்தானே பல ஞாபகங்கள் என் நெஞ்சில் வந்துவிடுகிறது...

‌பெண்ணே நீ மாலைநேரத்து மஞ்சள் வெயில்... கருமேகத்தில் ஒளிரும் மின்னல் இவ்வளவு அழகிருந்தும் உன்னை பார்ப்பவரை ஏன் தீப்போல் கண்கலங்க வைத்து விடுகிறாய்... பெண்ணே உண்மை சொல்லிவிடு ஒரு புன்னகையில் பெண் இனத்தை கோவபட்டது ஏன்... தேவதைகள் வாழ்வது கண்டிப்பாக வீடாக இருக்காது அது கோயில்தான்.. உனக்குள் இருக்கும் அழகை எப்படி சொல்வது...  நீ எனக்கில்லை என்ற வேதனையில் கண் மூடி ஒரு ஓரம் நான் சாய்கிறேன்.. அப்படி வரும் கண்ணீரில் நான் மகிழ்கிறேன்..
உன்னால் தானே பலஞாபம் வந்தாடுகிறது...

எங்கள் மனதை ‌பார்த்தவுடன் கொள்ளையடித்தாய் அந்த தந்திரத்தை  எங்கு சென்று கற்றுவந்தாய்... விழி அசைவில் வலைவிரிக்கிறாய் நாங்கள் அனைவரும் உன்னை பல்லக்கில் தூக்கிச் செல்ல தயாராக இருக்கிறோம்... உன் விரல் பிடிக்கிற வரத்திற்குதான் நான் உயிரோடு இருக்கிறேன் என் காதல் என்னவாகும் அது உன் பாதத்தில் மண்ணாகிவிடுமோ  சொல் என் அன்பே.... என பாடல் எழுதப்பட்டுள்ளது.

இப்பாடலின் காட்சி அமைப்பு... மழை.. வீட்டின் அழகு.. நடனம் அனைத்தும் அருமையாக அமைந்திருக்கும்.


பாடல் விவரம்:


படம்: யாரடி நீ மோகினி
பாடலாசிரியர் : நா.முத்துக்குமார்
நடிப்பு : தனுஷ், நயன்தாரா, ரகுவரன்

இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்: ஹரிஹரன்
இயக்கம் : எ. ஜவகர்

வெளிவந்த ஆண்டு : ஏப்ரல் 4, 2008.

அந்த பாடல் வரிகள் : 


பல்லவி :
வெண்மேகம் பெண்ணாக உருவானதோ
இந்நேரம் எனை பார்த்து விளையாடுதோ (வெண்மேகம்)

உன்னாலே பல ஞாபகம்
என் முன்னே வந்தாடுதே
ஒரு நெஞ்சம் திண்டாடுதே.. (உன்னாலே)

வார்த்தை ஒரு வார்த்தை
சொன்னால் என்ன?
பார்வை ஒரு பார்வை
பார்த்தால் என்ன?

(உன்னாலே) (வெண்மேகம்
 

சணைம் -1
மஞ்சள் வெயில் நீ மின்னல் ஒளி நீ
உன்னை கண்டவரை கண் கலங்க நிற்கவைக்கும் தீ
பெண்ணே என்னடி உண்மை சொல்லடி
ஒரு புன்னகையில் பெண் இனமே கோவப்பட்டதென்னடி

தேவதை வாழ்வது வீடில்லை கோவில்
கடவுளின் கால் தடம் பார்க்கிறேன்
ஒன்றா இரண்டா
உன் அழகை பாட

கண்மூடி ஓரு ஓரம் நான் சாய்கின்றேன்
கண்ணீரில் ஆனந்தம் நான் காண்கின்றேன்

(உன்னாலே)


சரணம் - 2
எந்தன் மனதை கொள்ளையடித்தாய்
இந்த தந்திரமும் மந்திரமும் எங்கு சென்று படித்தாய்
விழி அசைவில் வலை விரித்தாய்
உன்னை பல்லக்கினில் தூக்கி செல்ல கட்டளைகள் விதித்தாய்

உன் விரல் பிடித்திடும் வரம் ஒன்று கிடைக்க
உயிருடன் வாழ்கிறேன் நானடி
என் காதலும் என்னாகுமோ
உன் பாதத்தில் மண்ணாகுமோ

(வெண்மேகம்)


அந்த பாடலையும் பாருங்கள் :




என் வேலையை நான் செய்து விட்டேன் ரசித்தவர்கள் தயவு செய்து  கருத்து சொல்லிவிட்டு செல்லுங்கள்..
 
அன்பான வாசகர்களே இதை எப்போது படித்தாலும்  தங்களுடைய கருத்தை சொல்லுங்க.. அதுதான் என்னைமேலும் உழைக்க வலுசேர்க்கும்... நன்றி... நன்றி...

Thursday, April 7, 2011

எதிரிக்கும் வேண்டாம் இந்த அவஸ்தை...


பாடலின் சூழ்நிலை :
 

நாயகன் ஒரு பிரபல ரவுடியின் தம்பி.. இவரும் ஒரு ரவுடி.. நியாயத்திற்காக தன் அண்ணனின் கட்டளையை ஏற்று அடிதடி செய்கிறார். இவர் வாழ்வில் ஒரு பெண் குறுக்கிடுகிறாள். இருவருக்கும் அவர்களை அறியாமலே காதல் வயப்படுகிறார்கள். நாயகன் தன் காதலை நாயகியிடம் சொல்லி விட நினைக்கும் போது பயம் அவரை ஆட்கொள்கிறது. அடிதடியில் அமர்க்களப்படுத்தும் அவர் காதலை சொல்ல நினைக்கும் பேர்து தடுமாறுகிறார். இப்படி இருவருக்கும் நெருக்கம் அதிகமாகிறது. ஒரு வழியாக நாயகியே நாயகனிடம்  காதலை சொல்ல வர அடுத்த நாள் நாயகனின் பிறந்த நாள் என்று தெரியவருகிறது. சரி சொல்ல வந்த காதலை நாளை தங்களுடைய பிறந்த நாளில் சொல்வதாக கூறி சென்று விடுகிறார்.. அந்த ஒரு நாள் ஏற்படும் தவிப்பை உணர்த்துவது போன்று பாடல் அமைக்கப்பட்டுள்ளது.

பாடலுக்கான விளக்கம் :
 

என் காதலியின் கண்கள் என்பது என்ன தெரியுமா.. அது என்னை தொடாமலே தொட்டுச் செல்லும் தென்றல் காற்று. என்னுடைய நெஞ்சத்தில் கொட்டுகின்ற மின்னல் ‌எது தெரியுமா.. அது அவள் கண்ணோறம் மின்னுகின்ற காதல்தான் இருப்பது ஒரு நாள்தான் அதுக்குள்ளே உன் மௌனம் என்னை கொன்று விடும்போலிருக்கிறதே. அதனால் தான் நான் காற்றில் பறக்கிற காகிதம் போல் ஆகிவிட்டேன்..


இந்த காதல் என்பது எவ்வளவு கொடுமையாக அவஸ்தை.. நரகத்தில் இருப்பது போன்றே இருக்கிறேன்... தயவு இந்த அவஸ்த்தை என்னுடைய எதிரிக்கூட வரவேண்டாம். நெருப்பை தின்றது போலவும்.. அமிலத்தை (ஆசிட்) குடித்தது போல் இருக்கிறதே.. நோயை கொடுத்தவளே அதற்கான மருந்தை ஏன் தர மறுத்தாய்.. இந்த வாலிபத்தின் தோட்டத்தில் ரகசியமாய் வந்து பூப்பறித்துவிட்டு சென்றவள் நீதானா...

‌பெண்களின் உள்ளம் மிகப்பெரிய படுகுழி.. இதில் விழுந்து எழுந்தவ‌ன்.. அவற்றின் அளவு ஆழம்.. அளந்தவன் எவனுமில்லை.. ஓ.. உலகமே இந்த கடவுள் பூமிக்கு வராதாதற்கு காரணம் என்ன தெரியுமா.. அது காதல் இருக்கிற பயத்தில் தான் அப்படி கடவுள் பூமிக்கு வந்தால் தாடியுடன் தான் இந்த பூமியில் அலைவான் என்று இந்த பாடல் விளக்குகிறது..
 

பாடலின் சில தகவல்கள் :
 

1. இப்படம் 2001 வெளிவந்த வெற்றிப்படங்களில் சிறந்தப்படம்.
2. பாடல் காட்சிகள் இயற்கை சூழலில் மிகவும் ரம்மியமாக அமைந்திருக்கும்.
3. அஜித்தின் பேர் சொல்லக்கூடிய விதத்தில் இப்படத்தை கொடுத்திருந்தார் முருகதாஸ்.


பாடலின் விவரம் :


படம் : தீனா 2001
இசை : யுவன் ஷங்கர் ராஜா
பாடலாசிரியர்: வாலி
பாடியவர்கள் : ஷங்கர் மஹாதேவன்
கதை இயக்கம் : ஏ.ஆர்.முருகதாஸ்.

அந்த பாடல் வரிகள் : 

பல்லவி :

சொல்லாமல் தொட்டு செல்லும் தென்றல்
என் காதல் தேவதையின் கண்கள்
நெஞ்சத்தில் கொட்டி செல்லும் மின்னல்
கண்ணோரம் மின்னும் அவள் காதல்

ஒரு நாளைக்குள்ளே மெல்ல மெல்ல
உன் மௌனம் என்னை கொல்ல கொல்ல
இந்த காதலில் நான்
காற்றில் பறக்கும் காகிதமானேன்

(சொல்லாமல் தொட்டு செல்லும் தென்றல்,)

சரணம் - 1

ஓ....
காதலின் அவஸ்தை  எதிரிக்கும் வேண்டாம்,
நரக சுகம் அல்லவா நெருப்பை விழிங்கிவிட்டேன்,
ஓ... அமிலம் அருந்திவிட்டேன்,

நோயாய் நெஞ்சில் நீ நுழைந்தாய்
மருந்தை ஏனடி தர மறந்தாய்
வாலிபத்தின் சோலையிலே
ரகசியமாய் பூ பறித்தவள் நீ தானே…

(சொல்லாமல் தொட்டு செல்லும் தென்றல்)

சரணம் -2

 ம்.... பெண்களின் உள்ளம் படுக்குழி என்பேன்...
விழுந்து எழுந்தவன் யார்?
ஆழம் அளந்தவன் யார்?
கரையை கடந்தவன் யார்?
காதல் இருக்கும் பயத்தினில் தான்
கடவுள் பூமிக்கு வருவதில்லை
மீறி அவன் பூமி வந்தால்
தாடியோடதான் அலைவான் வீதியிலே,

(சொல்லாமல் தொட்டு செல்லும் தென்றல்)

அந்த பாடலை டவுன் லோடு செய்ய :


சொல்லாமல் தொட்டு செல்லும்
அந்த பாடலைப் பாருங்கள்...




என் வேலையை நான் செய்து விட்டேன் ரசித்தவர்கள் தயவு செய்து  கருத்து சொல்லிவிட்டு செல்லுங்கள்..   
 

இப்பாடல் நண்பர் ஆர்.கே. சதீஷ்குமார்  அவர்களுக்கு. ....

அன்பான வாசகர்களே இதை எப்போது படித்தாலும்  தங்களுடைய கருத்தை சொல்லுங்க.. அதுதான் என்னை உற்சாகப்படுத்தும்... நன்றி... நன்றி...

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...