Saturday, March 26, 2011

நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு....


பாடலுக்கான  சூழ்நிலை..

இந்த பாடல் படத்தின் துவக்க பாடல், படத்தின் நாயகன் பொன்னுமணி  ஒரு கிராமத்து இளைஞன் அவருடைய மாமன் பெண்ணான நாயகி  சிந்தாமணி (சௌந்தர்யா) நகரத்திற்கு சென்று தன் படிப்பை முடித்து விட்டு கிராமத்திற்கு வருகிறார். சிறுவயது முதல் மிக அன்பாக பழகிவரும் இவர்கள் வளர்ந்தப்பின் சந்திக்க நேர்கிறது. ரயில் வண்டியில் வரும் நாயகியை ‌அழைத்து வர நாயகன் மாட்டுவண்டியில் செல்கிறார். சிறு வயதில் முதுகில் தூக்கிய பழக்க‌த்தை மறக்காத நாயகி தன்னை வீட்டுவரை முதுகில் சுமந்து செல்லும் படி அன்பு கட்டளையிடுகிறார். அதை மீறமுடியாத நாயகன் அவளை சுமந்து கொண்டு வருவது போன்றும் அதன் பின்னனியில் இந்த பாடல் இடம் பெறும்.

பாடலுக்கான பொருள் :

உலகே என் நெஞ்சுக்குள் இருப்பது யாரென்று உங்களுக்கு தெரியுமா, அந்த நெஞ்சுக்குள் கொஞ்சி பேசி ஆடிக் கொண்டிருக்கும் அந்த உருவம் வெளியில் தெரியுமா.. இந்த உலகே அழிந்துப் போனாலும்.. என் உயிரே பிரிந்துப் போனாலும் உள்ளத்தில் இருக்கும் அவளின் உருவம் மட்டும் அழியாது. உன்னால் நான் உண்ணாமலும் உறங்காமலும் வாழ்ந்துக் கொண்டிருக்கிறேன்.

அன்பே உன் மீது ஏக்கப்பட்டு நான் இளைத்து விட்டேன் பாடம் படித்து சலித்து போய்விட்டது. தூக்கம் கெட்டு துடித்துக் கொண்டிருக்கிறேன். என் தேகம் தொட்டு அந்த எக்கத்தை போக்கிவிடு உன்னால், உண்ணாமலும் உறங்காமலும் தவித்துக் கொண்டிருக்கிறேன்.

கலங்காதே கண்மணி விரைவில் உனக்கு காஞ்சி பட்டு கொடுத்து கரம்பிடிப்பேன். காலமெல்லாம் உன்னை நான் சுமப்பேன். அன்‌பே என் கண்ணில் எப்போதும் நீதான்.  உன்னாலும் நான் உண்ணாமல் உறங்காமல் வாடிக் கொண்டிருக்கிறேன்.
என இருவரும் மாறி மாறி பாடல் வரும் படி அமைந்துள்ளது.

பாடலின் சிறப்புகள் :

1. கார்த்தின் சிறந்த படங்களில் இதுவும் ஒன்று.
2. இளையராஜாவின் இசை படம் முழுக்க ஆட்சி செய்யும்.
3. நாயகி மறைந்த சௌந்தர்யா இந்த படத்தில்தான் அறிமுகம் ஆனார்.
4. பாடலின் காட்சி அமைப்பு கிராமப்பிண்ணனியில் ரம்மியமான சூழலில் காட்சி அமைக்கப்பட்டிருக்கும்.

பாடலின் விவரம் :

திரைப்படம் : பொன்னுமணி (1993)
இசை :  இளையராஜா
நடிப்பு : கார்த்திக், சௌந்தர்யா, சிவக்குமார்
பாடலாசிரியர் : R.V.உதயகுமார்
பாடியவர்கள்:எஸ்.ஜானகி, எஸ்.பி.பாலசுப்பிரமணியம்.
இயக்கம் : 
R.V.உதயகுமார்
 
அந்த பாடல் வரிகள் :

பல்லவி :


ஆ : நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு சொன்னால் புரியுமா
         அது கொஞ்சி கொஞ்சி பேசுறது கண்ணில் தெரியுமா (2)
         உலகே அழிஞ்சாலும் உன் உருவம் அழியாதே
         உயிரே பிரிஞ்சாலும் உறவேதும் பிரியாதே
         உண்ணாமல் உறங்காமல் உன்னால் தவிக்கும் பொன்னுமணி

சரணம் - 1

பெ : ஏக்கப்பட்டு பட்டு நான் இளைத்தேனே
          ஏட்டு கல்வி கேட்டு நான் சலித்தேனே

‌ஆ : தூக்கம் கெட்டு கெட்டு துடிக்கும் முல்லை மொட்டு
        தேக்கு மரம் தேகம் தொட்டு தேடி வந்து தாளம் தட்டு

பெ : என் தாளம் மாறாதையா
           உண்ணாமல் உறங்காமல் உன்னால் தவிக்கும் சிந்தாமணி...

பெ : நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு சொன்னால் புரியுமா
         அது கொஞ்சி கொஞ்சி பேசுறது கண்ணில் தெரியுமா (2)
         உலகே அழிஞ்சாலும் உன் உருவம் அழியாதே
         உயிரே பிரிஞ்சாலும் உறவேதும் பிரியாதே
         உண்ணாமல் உறங்காமல் உன்னால் தவிக்கும் பொன்னுமணி

சரணம் - 1

ஆ :காஞ்சி பட்டு ஒண்ணு நான் கொடுபேனே
       காலமெல்லாம் உன்னை நான் சுமப்பேனே

பெ :மாமன் உன்னை கண்டு ஏங்கும் அள்ளி தண்டு
       தோளில் என்னை அள்ளி கொண்டு தூங்க வைப்பாய் அன்பே என்று

ஆ : என் கண்ணில் நீ தானம்மா
         உண்ணாமல் உறங்காமல் உன்னால் தவிக்கும் பொன்னுமணி


அந்த பாடலையும் பாருங்கள் :


 

என் வேலையை நான் செய்து விட்டேன் ரசித்தவர்கள் தயவு செய்து  கருத்து சொல்லிவிட்டு செல்லுங்கள்..
 
இப்பாடல் நண்பர் சி.பி.செந்தில்குமார் அவர்களுக்கு. ....

அன்பான வாசகர்களே இதை எப்போது படித்தாலும்  தங்களுடைய கருத்தை சொல்லுங்க.. அதுதான் என்னைமேலும் உழைக்க வலுசேர்க்கும்... நன்றி... நன்றி...

Wednesday, March 16, 2011

சின்னத் தாயவள் தந்த ராசாவே.........


 பாடலுக்கான சூழ்நிலை :

நாயகன் பிறந்த உடனே அவரது தாய், அனாதையாக ஒரு கூட்ஸ் வண்டியில் அனுப்பிவிடுகிறார். இப்படி சிறுவயதில் குழந்தை பெற்றுவிட்டோமே என்று  இவ்வாறு முடிவெடுக்கிறார். நாயகன் ஒரு குப்பத்தில் ஒரு பாட்டி எடுத்து வளர்த்து ஆளாக்குகிறார். 

சூர்யா என்ற பெயரில் ஒரு ரவுடியாக வளர்ந்து வருகிறார். தன்னை இப்படி அனாதையாக விட்டு விட்ட தாயின் மிகவும் கோவாமாக இருக்கிறார்.  அதற்குபின் வளர்ந்து தன் தாயைப்பற்றிய உண்மையை அறிந்து அந்த தாய் யாருரென்று அடையாளம் காணுகிறார். தன்னுடைய தாயை முதல்முதலாய் காண ஒரு கோயிலுக்கு வருகிறார் நாயகன். அப்போது தன் தாயை அவருக்கு தெரியாமல் பார்க்கிறார். நான் ஒரு ரவுடி அந்த தாயிக்கு நான் தான் மகன் என்ற உண்மையை சொல்லக்கூடாது என்று முடிவெடுக்கிறார். அந்த சூழ்நிலையில் இப்படல் இடம்பெருகிறது.
.

பாடலுக்கான பொருள் :

ஒரு சின்ன தாயால் உறுவான ராசாவே.. நீ முள்ளில் தோன்றினாலும் நீயும் ஒரு ரோசாதான். உன்னை விட்டுவிட்ட பிறகு உன்னை எப்படியாவது கண்டுபிடிக்கவேண்டும் என்று அவள் அழுகிறாள்.. நீயும் தாய் வேண்டி அழுகிறாய்.. வெண்ணிலா தேயும் வரம் பெற்றது ஆனால் என்நிலா தேயாது.. மகனே உன்னை இந்த நெஞ்சோடு அனைக்காது இந்த உலகை விட்டு பிரியாது என்று ஏக்கத்தோடு பாடுகிறார்.

உன்னுடைய முகம் பால் மணம் வீசக்கூடியது.. உன் பார்வையில் தாய் மனம் பொங்கி வழிகிறது உன்னை வரம் வாங்கி பெற்றெடுத்தேன்.. ஆனால் வெய்யிலில் உன்னை வாட வைத்துவிட்டேனே.. இந்த தெய்வம் அந்த கோயிலை சென்று சேரும் நாள் எப்போது.. என்ற பொருள் படும்படி பாடல் இயற்றப்பட்டுள்ளது.

பாடலின் சிறப்புகள் :

1. தமி‌ழ் இருக்கும் அம்மா பாடலில் எப்போதும் மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்த பாடல்.

2.மணிரத்னம் இயக்கத்தில் ரஜினி நடித்த இப்படத்தில் வரும் இபபாடலில் ரஜினியின் நடிப்பு தாய் பாசத்திற்காக ஏங்கும் அவரது முகபாவனை சிறப்பாக இருக்கும்.

3.இத்திரைப்படத்தில் வரும் கதாபாத்திரங்களான அர்ஜூனன் (அர்ஜீன்) கர்ணா (சூர்யா), துரியோதனன் (தேவ்ராஜ்) போன்றவர்கள் மகாபாரதக் கதையில் பின்னப்பட்ட கதாபாத்திரங்கள் என்பதாக பலரும் கருதுவது குறிப்பிடத்தக்கது.
 4. இளையராஜாவின் இசை, ஜானகி அம்மாவின் குரல்,  ஸ்ரீவித்யாவின் நடிப்பு,  சந்தோஷ் சிவத்தின் ஒளிப்பதிவு சிறப்பாக இருந்தது.
 
பாடலின் விவரம் :

படம்: தளபதி
இசை: இளையராஜா
எழுதியவர்: வாலி
பாடியவர்: எஸ்.ஜானகி
இயக்கம் : மணிரத்தினம்
வெளிவந்த ஆண்டு : 1991


ஷஅந்த பாடலின் வரிகள் :


பல்லவி

ம்.. ம்ம்.. ம்ம்.. ம்ம்..

சின்னத் தாயவள் தந்த ராசாவே
முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே
சின்னத் தாயவள் தந்த ராசாவே
முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே
சொல்லவா ஆராரோ.. நம் சொந்தங்கள் யாராரோ
உந்தன் கண்ணில் ஏன் தான் நீரோ   (சின்னத் தாயவள்


சரணம் -1 
தாயழுதாளே நீ வர.. நீயழுதாயே தாய் வர
தேய்பிறை காணும் வெண்ணிலா
தேய்வது உண்டோ என் நிலா
உன்னை நான் இந்த நெஞ்சில் வாங்கிட
மெத்தை போல் உன்னை மெல்லத் தாங்கிட
விழி மூடாதோ.   (சின்னத் தாயவள்


சரணம் -2 
பால்மணம் வீசும் பூமுகம்.. பார்க்கையில் பொங்கும் தாய் மனம்
ஆயிரம் காலம் ஓர் வரம் வேண்டிட வந்த ஓர் வரம்
வெயில் வீதியில் வாடக் கூடுமோ
தெய்வக் கோயிலைச் சென்று சேருமோ
எந்தன் தேனாறே..  (சின்ன தாயவள்)


அந்த பாட்டையும் கொஞ்சம் கேளுங்க...

படிச்சிட்டு போயிட்டா எப்படி...
ஏதாவது சொல்லிட்டு போங்க..

இந்தப்பாடல் வேடந்தாங்கல் கரன் அவர்களுக்கு மிகவும் பிடித்த பாடல்...

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...