பாடலுக்கான சூழ்நிலை..
இந்த பாடல் படத்தின் துவக்க பாடல், படத்தின் நாயகன் பொன்னுமணி ஒரு கிராமத்து இளைஞன் அவருடைய மாமன் பெண்ணான நாயகி சிந்தாமணி (சௌந்தர்யா) நகரத்திற்கு சென்று தன் படிப்பை முடித்து விட்டு கிராமத்திற்கு வருகிறார். சிறுவயது முதல் மிக அன்பாக பழகிவரும் இவர்கள் வளர்ந்தப்பின் சந்திக்க நேர்கிறது. ரயில் வண்டியில் வரும் நாயகியை அழைத்து வர நாயகன் மாட்டுவண்டியில் செல்கிறார். சிறு வயதில் முதுகில் தூக்கிய பழக்கத்தை மறக்காத நாயகி தன்னை வீட்டுவரை முதுகில் சுமந்து செல்லும் படி அன்பு கட்டளையிடுகிறார். அதை மீறமுடியாத நாயகன் அவளை சுமந்து கொண்டு வருவது போன்றும் அதன் பின்னனியில் இந்த பாடல் இடம் பெறும்.
பாடலுக்கான பொருள் :
உலகே என் நெஞ்சுக்குள் இருப்பது யாரென்று உங்களுக்கு தெரியுமா, அந்த நெஞ்சுக்குள் கொஞ்சி பேசி ஆடிக் கொண்டிருக்கும் அந்த உருவம் வெளியில் தெரியுமா.. இந்த உலகே அழிந்துப் போனாலும்.. என் உயிரே பிரிந்துப் போனாலும் உள்ளத்தில் இருக்கும் அவளின் உருவம் மட்டும் அழியாது. உன்னால் நான் உண்ணாமலும் உறங்காமலும் வாழ்ந்துக் கொண்டிருக்கிறேன்.
அன்பே உன் மீது ஏக்கப்பட்டு நான் இளைத்து விட்டேன் பாடம் படித்து சலித்து போய்விட்டது. தூக்கம் கெட்டு துடித்துக் கொண்டிருக்கிறேன். என் தேகம் தொட்டு அந்த எக்கத்தை போக்கிவிடு உன்னால், உண்ணாமலும் உறங்காமலும் தவித்துக் கொண்டிருக்கிறேன்.
கலங்காதே கண்மணி விரைவில் உனக்கு காஞ்சி பட்டு கொடுத்து கரம்பிடிப்பேன். காலமெல்லாம் உன்னை நான் சுமப்பேன். அன்பே என் கண்ணில் எப்போதும் நீதான். உன்னாலும் நான் உண்ணாமல் உறங்காமல் வாடிக் கொண்டிருக்கிறேன்.
என இருவரும் மாறி மாறி பாடல் வரும் படி அமைந்துள்ளது.
பாடலின் சிறப்புகள் :
பாடலின் சிறப்புகள் :
1. கார்த்தின் சிறந்த படங்களில் இதுவும் ஒன்று.
2. இளையராஜாவின் இசை படம் முழுக்க ஆட்சி செய்யும்.
3. நாயகி மறைந்த சௌந்தர்யா இந்த படத்தில்தான் அறிமுகம் ஆனார்.
4. பாடலின் காட்சி அமைப்பு கிராமப்பிண்ணனியில் ரம்மியமான சூழலில் காட்சி அமைக்கப்பட்டிருக்கும்.
4. பாடலின் காட்சி அமைப்பு கிராமப்பிண்ணனியில் ரம்மியமான சூழலில் காட்சி அமைக்கப்பட்டிருக்கும்.
பாடலின் விவரம் :
பாடலாசிரியர் : R.V.உதயகுமார்
பாடியவர்கள்:எஸ்.ஜானகி, எஸ்.பி.பாலசுப்பிரமணியம்.
இயக்கம் : R.V.உதயகுமார்
இயக்கம் : R.V.உதயகுமார்
அந்த பாடல் வரிகள் :
பல்லவி :
ஆ : நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு சொன்னால் புரியுமா
அது கொஞ்சி கொஞ்சி பேசுறது கண்ணில் தெரியுமா (2)
உலகே அழிஞ்சாலும் உன் உருவம் அழியாதே
உயிரே பிரிஞ்சாலும் உறவேதும் பிரியாதே
உண்ணாமல் உறங்காமல் உன்னால் தவிக்கும் பொன்னுமணி
சரணம் - 1
பெ : ஏக்கப்பட்டு பட்டு நான் இளைத்தேனே
ஏட்டு கல்வி கேட்டு நான் சலித்தேனே
ஆ : தூக்கம் கெட்டு கெட்டு துடிக்கும் முல்லை மொட்டு
தேக்கு மரம் தேகம் தொட்டு தேடி வந்து தாளம் தட்டு
பெ : என் தாளம் மாறாதையா
உண்ணாமல் உறங்காமல் உன்னால் தவிக்கும் சிந்தாமணி...
பெ : நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு சொன்னால் புரியுமா
அது கொஞ்சி கொஞ்சி பேசுறது கண்ணில் தெரியுமா (2)
உலகே அழிஞ்சாலும் உன் உருவம் அழியாதே
உயிரே பிரிஞ்சாலும் உறவேதும் பிரியாதே
உண்ணாமல் உறங்காமல் உன்னால் தவிக்கும் பொன்னுமணி
சரணம் - 1
ஆ :காஞ்சி பட்டு ஒண்ணு நான் கொடுபேனே
காலமெல்லாம் உன்னை நான் சுமப்பேனே
பெ :மாமன் உன்னை கண்டு ஏங்கும் அள்ளி தண்டு
தோளில் என்னை அள்ளி கொண்டு தூங்க வைப்பாய் அன்பே என்று
ஆ : என் கண்ணில் நீ தானம்மா
உண்ணாமல் உறங்காமல் உன்னால் தவிக்கும் பொன்னுமணி
அந்த பாடலையும் பாருங்கள் :
என் வேலையை நான் செய்து விட்டேன் ரசித்தவர்கள் தயவு செய்து கருத்து சொல்லிவிட்டு செல்லுங்கள்..
என் வேலையை நான் செய்து விட்டேன் ரசித்தவர்கள் தயவு செய்து கருத்து சொல்லிவிட்டு செல்லுங்கள்..
இப்பாடல் நண்பர் சி.பி.செந்தில்குமார் அவர்களுக்கு. ....
அன்பான வாசகர்களே இதை எப்போது படித்தாலும் தங்களுடைய கருத்தை சொல்லுங்க.. அதுதான் என்னைமேலும் உழைக்க வலுசேர்க்கும்... நன்றி... நன்றி...