Friday, January 28, 2011

வழிகாட்டுங்கள் பதிவர்களே..!


அன்பார்ந்த பதிவுலக நண்பர்களே மற்றும் வலைதல வாசகர்களே... லட்சக்கணக்கான வலை பதிவர்கள் சூழ்ந்துள்ள இந்த  பதிவுலகில் நானும் என்னுடைய பயணத்தை இன்றுமுதல் துவங்குகிறேன்...

வலைக்குள்.. பதிவர்ளே.. வாசகர்களே.. முதல் அடி எடுத்து வைக்கும் என்னையும் கரம் பிடித்து அழைத்துச்செல்லுங்கள்...

இருக்கும் வலைதளங்களை படிக்க ஆளில்லாத போது நீ வந்து என்ன கிழிக்கப்போகிறாய் என்ற கேள்வி உங்கள் நெஞ்சங்களில் எழும் என்ன செய்ய இந்த கடல்களுக்கு மத்தியில் நானும் ஒரு மடுவாய் இருந்து விட்டுப் போகிறேன்... இந்த மலைகளுக்கு மத்தியில் நானும் ஒரு கூழாங்கல்லாய் கிடந்து விட்டுப் போகிறேன்...


இந்த வலைதளத்தில் நான் ‌கேட்டு.. 
நான் ரசித்த தமிழ் திரைஇசைப்பாடல்களின் 
மேன்மையை.. 
அதன் அழுத்தத்தை... 
அதன் அர்த்தத்தை... 
அதன் காட்சி அமைப்பை... 
அதன் பொருளை உங்களோடு: பகிர்ந்துக் கொள்ள போகிறேன்

முடிந்தால் பாராட்டலாம்... இல்லையென்றால் தீட்டித்தீர்க்கலாம்...
ஏனென்றால் வாழ்வில் வசந்தத்தை காணாத உலக ஜீவன்களில் நானும் ஒருவன்... உங்கள் பாராட்டை நான் பக்குவமாக வாங்கிக் கொள்வேன்... உங்கள் வசைகளை உராமாக மாற்றிக் கொள்வேன்....


அதிகமான பதிவுகள் போட்டு அதிக பின்னுட்டங்கள் வாங்கி... அதிக ஓட்டுகள் வாங்கி... அதிக இட்டுகள் குவித்து நான் என்ன நாட்டையா ஆளப்போகிறோன்..
 

தமிழை.. தமிழ் மொழியின் சிறப்பை... தமிழ் மொழியின் வளத்தை உங்களோடு பகிர்வதே என்எண்ணம்...

இனி பதிவுகளால் தொடருவோம்

11 comments:

  1. வாருங்கள் நண்பரே....உங்களுக்கு முதல் கமெண்டும், முதல் வோட்டும் நான்தான் போட்டிருக்கிறேன் என்று நினைக்கிறான். பதிவுலகில் சாதிக்க வாழ்த்துகிறேன்.

    ReplyDelete
  2. முதல் அடி எடுத்து வைக்கும் என்னையும் கரம் பிடித்து அழைத்துச்செல்லுங்கள்...////

    கரம் பிடித்து அழைத்து செல்ல மாட்டோம் நண்பரே....தோள் கொடுத்து அ(ரவ)ணைத்து செல்கிறோம். வருக நண்பரே....Word verification -ஐ நீக்கிவிடுங்கள். அது இருந்தால் பின்னூட்டம் போடுவதற்கு இடைஞ்சலாக இருக்குமென்று நிறைய நண்பர்கள் கருதுவார்கள்.

    ReplyDelete
  3. வாங்க வாங்க... ஆனா எனக்கு ஒரு டவுட்டு!!!! \\\பதிவர்கள் சூழ்ந்துள்ள இந்த பதிவுலகில் நானும் என்னுடைய பயணத்தை இன்றுமுதல் துவங்குகிறேன்...\\\ அப்படின்னு சொல்றீங்க ஆனால் http://ungaveetupillai.blogspot.com/ இதுல நிறைய எழுதியிருக்கீங்களே!??????

    ReplyDelete
  4. உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்...
    வாருங்கள் ஒன்றாக இணைந்து நடப்போம்...

    ReplyDelete
  5. ரஹீம் கஸாலி said...

    WELCOME
    என்னை முதல் முதலாய் பின்னுட்டம் அளித்து ஓட்டிட்டு பின் தொடர்ந்தமைக்கு என் நன்றிகள்...

    ReplyDelete
  6. வாழ்த்துக்கள் நண்பரே!
    உங்களுடன் கரம் கோர்த்து
    வழி காட்டுவோம்

    ReplyDelete
  7. வருக!நல்ல பதிவுகள் தருக!

    ReplyDelete
  8. ////இந்த மலைகளுக்கு மத்தியில் நானும் ஒரு கூழாங்கல்லாய் கிடந்து விட்டுப் போகிறேன்.../////

    வரிகள் அருமை! தொடர்ந்து எழுதுங்கள், ஒரே மாதிரி அல்லாமல்!

    ReplyDelete
  9. http://jojosurya2011.blogspot.com/2011/01/blog-post.html என்ன கொடும இது?

    ReplyDelete

படிச்சி முடிச்சாச்சா..
தட்டிக் கொடுங்கள் அதை அடைக்கத்துக் கொள்கிறேன்...
இல்லையென்றால்
குட்டு வையுங்கள் அதை உரமாக்கிக் கொள்கிறேன்..
தட்டலோ குட்டோ அவசியம் பதிவு செய்யுங்கள்

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...